மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து வரும் ஒன்றிய, மாநில அரசுகளை அம்பலப்படுத்தி, தென்சென்னை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 37 நாள் கிளர்ச்சி பிரச்சார இயக்கத்தை ஜூன் 10ந் தேதி முதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஞாயிறன்று (ஜூன் 12) மதுரவாயல் பகுதி, ஸ்ரீலட்சுமி நகர் பகுதியில் கிளைச் செயலாளர் பழனி தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், பகுதிச் செயலாளர் வி.தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விருகம்பாக்கம் பகுதி, அன்னை சத்யாநகர் பகுதியில் நடைபெற்ற 5 குழுக்களின் பிரச்சாரத்தை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தொடங்கி வைத்தார். பகுதிச் செயலாளர் இ.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். (கீழ் படம்)