states

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பெரும் தீ விபத்து

சென்னை, ஏப். 27- சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 3 அடுக்கு மாடி கட்டிடங்கள் உள்ளன. இதில் 2ஆவது டவரின் 2ஆவது தளத்தில் உள்ள கல்லீரல் சிகிச்சை பிரிவு அருகில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் கட்டடம் முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது. அதில்  ஏற்பட்ட கரும்புகை அருகில் இருந்த நரம்பியல் பிரிவிற்கும் பரவியது. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த  நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.  அந்த நோயாளிகளை அவர்களது உறவினர்களும், தீய ணைப்புத் துறையினரும், செய்தி யாளர்களும் பத்திரமாக  மீட்டனர். அதிக புகை இருந்ததால் மீட்புப் பணியில்  சிக்கல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியமேடு, வேப்பேரி, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து 4க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பொதுமக்கள், தீயணைப்பு வீரர்கள் நோயாளிகளை ஏணி மூலமாகவும், தோளில் சுமந்து  சென்றும் காப்பாற்றினர். மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர் களை ஊழியர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மீட்கப்பட்ட நோயாளிகள் பலர் கடும் வெயிலிலும் மரத்தடியிலும் அமர வைக்கப்பட்டதால் மிகவும் சிரமப்பட்டனர். தமிழக சட்டப்பேரவையில் இந்த தீ விபத்து தொடர்பாக விளக்கம் அளித்த  அமைச்சர் மா.சுப்பிரமணியன், 105 ஆண்டுகள் பழமையான கட்டி டத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதுஎன்றார்இ  அந்த கட்டடத்தில் மொத்தம் 99 நோயாளிகள் சிகிச்சையில் இருந்ததாகவும், தீ விபத்து ஏற்பட்டதும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத் தனர். நோயாளிகள் அனைவரும் உடனடியாக வேறு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் உயிர் பாதிப்பு இல்லை என்பது மன நிறைவான விஷயம் என்றார். கடந்த பத்து ஆண்டுகளாக அங்கு பராமரிப்பு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரி வித்திருக்கிறது. வரும் நிதியாண்டில் நரம்பியல் மற்றும் நெஞ்சகத் துறைக்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.