சென்னை, ஜூன் 9- கர்நாடக மாநில முன்னாள் முதல மைச்சர் சித்தராமையாவுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படு வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவள வன் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். சமூகம், அரசியல், பண்பாடு, கலை - இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்பு மிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு” ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டு தோறும் வழங்கிச் சிறப்பித்து வருகி றோம். இந்த ஆண்டு முதல் கூடுதலாக ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கு கிறோம். 2022ஆம் ஆண்டுக்கான “அம்பேத்கர் சுடர்” விருது கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமை யாவுக்கு வழங்கப்படுகிறது. பெரியார் ஒளி விருது எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை, காமராசர் கதிர் விருது விஜிபி சந்தோசம், அயோத்தி தாசர் ஆதவன் விருது முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி செல்லப்பன், காயி தேமில்லத் பிறை- எஸ்.டி.பி.ஐ தலை வர் தெகலான் பாகவி, செம்மொழி ஞாயிறு விருது தொல்லியல் அறிஞர் பேரா.கா.ராசன், மார்க்ஸ் மாமணி மறைந்த எழுத்தாளர் ஜவஹர் ஆகி யோருக்கு வழங்கப்படும். இந்த விருதுகள் வழங்கும் விழா, நடை பெறும் தேதி பின்னர் அறிவிக்கப் படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.