சென்னை,மே 9- சென்னை மயிலாப்பூர் ஆர்.ஏ.புரத்தில் தனது வீடு இடிக்கப்பட்டதை அறிந்து தீக்குளித்து உயிரிழந்த கண்ணையா குடும் பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப் படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி கடந்த சில நாட்க ளாக நடைபெற்று வருகிறது. பொதுமக்க ளின் கடும் எதிர்ப்பையும் மீறி அப்பகுதி யில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடு பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட கண் ணையா என்பவர் தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த சம்பவம் திங்களன்று (மே 9) சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத் திற்கு பதில் அளித்து முதல்வர் பேசுகை யில், “மயிலாப்பூரில் ஒரு விரும்பத்தகாத நிகழ்வு நடந்திருக்கிறது. இனி வரக்கூடிய காலங்களில் இதுபோன்ற ஆக்கி ரமிப்புகளை அகற்றும் பணி நடக்கும்போது, முன்கூட்டியே அந்தப் பகுதி மக்களுக்கு மறுகுடியமர்வு செய்யக்கூடிய இடம் குறித்து அவர்களின் கருத்துக்கள் கேட்கப் படும். அந்தப் பகுதி மக்கள் பிரதிநிதிக ளோடும் இதுகுறித்து கலந்துபேசி ஒரு இணக்கமான சூழ்நிலையை நிச்சயம் ஏற்படுத்துவோம்” என்றார்.
விரைவில் கொள்கை முடிவு!
மாற்று இடம் வழங்குவது குறித்து வரும் காலங்களில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்று வது குறித்தும் மறு குடியமர்வு கொள்கை ஒன்று அனைத்து மக்கள் நலன் சார்ந்த அம்சங்களுடன் விரைவில் உருவாக் கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ரூ.10 லட்சம் நிவாரணம்
மந்தவெளி, மயிலாப்பூர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியம் கட்டி வரும் வீடுகளில் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெரு மக்கள் மறு குடியேற்றம் செய்யப்படுவர். ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்து உயிரிழந்த கண்ணையா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகா ரத்தில் ஆர்.ஏ புரம் உயிரிழப்பே கடைசியாக இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கூறினார்.