டெங்கு காய்ச்சலால் சிறுமி பலி
தருமபுரி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந் துள்ளார். திருப்பத்தூர் சிவராஜ்பேட்டை யை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் 4 வயது மகள் அபிநீதி. இந்த சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச் சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள் ளார். சிறுமியின் தம்பியும் சகோதரியும் டெங்கு காய்ச்சலுக்கு தீவிர சிகிச்சை பிரி வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வந்தாலும் நடப்பாண்டில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது. இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 4,227 பேர் பாதிக் கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பீகாரில் அரசியல் கட்சித் தலைவர்கள் சுட்டுக் கொலை!
பீகார் மாநிலம், கயாவையொட்டிய அமாஸ் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட சிஹுலி கிராமத்தில் வசித்து வந்தவர் அன்வர் கான். சிராக் பாஸ்வானின் எல்ஜேபி (ஆர்) உறுப்பி னர் ஆவார். இவர், தனது மகனுடன் சலூன் கடையில் இருந்தபோது, திடீரென கடைக்குள் நுழைந்த மர்ம நபர்கள், அன் வர் அலியை அவரது மகன் கண் முன்பே சராமாரியாக சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதில் நிலை தடுமாறிய அன்வர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதேபோல பீகார் மாநிலம் பெகு சராய் மாவட்டம் மசூதன்பூர் தியாவைச் சேர்ந்தவர் அனிருதா சவுத்ரி. ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி தலைவராக இருந்து வந்த சவுத்ரி, வீட்டிற்கு வெளியே தூங் கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவு 1 மணியளவில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இதய செயலிழப்புடன் வந்த கர்ப்பிணி 35 நாட்கள் போராடி காப்பாற்றிய கிருஷ்ணகிரி அரசு மருத்துவர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவகானபள்ளி கிராமத்தைச் சேர்ந்த 26 வயது மதிக் கத்தக்க பெண் 36 வார கர்ப்பத்துடன் எந்த ஒரு அசை வும் இன்றி இருதய செயலிழப்புடன், கர்ப்ப கால வலிப்பு நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தசோகை உள்ளிட்ட பிரச்சனை களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் ஜூலை 9 அன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். தொடர்ந்து செயற்கை சுவாசம் தேவைப்பட்டதால் 35 நாட்களுக்கு அந்தப் பெண்ணிற்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. மருத்துவர்களின் தொடர் முயற்சியால் 80 நாள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு பெண்ணின் கை கால் களில் அசைவு ஏற்பட்டு படிப்படியாக இயற்கையாக சுவா சிக்க துவங்கினார். சிகிச்சைக்கு பின் தாயும்,சேயும் பத்திர மாக பூரண நலம் பெற்று புதனன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவர்களின் இந்த அர்ப்ப ணிப்பான பணி பாராட்டைப் பெற்றுள்ளது.
சுடுமண் குடுவை கண்டெடுப்பு
வெம்பக்கோட்டை அருகே உள்ளது விஜயகரிசல்குளம். இங் குள்ள உச்சிமேட்டு காட்டில் ஏற்கனவே முதற்கட்ட அக ழாய்வுப் பணிகள் நிறைவு பெற்றது. அதில் தங்க அணி கலன் உள்ளிட்ட ஏராளமான பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட் டன. தற்போது சுடுமண் குடுவை மற்றும் உடைந்த நிலையில் உள்ள சுடு மண் கலயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில், அழகிய வேலைப்பாடு களுடன் பூக்கள் போன்ற அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இக் குடுவை யை தண்ணீர் சேமித்து வைக்க பழங்கால மனிதர்கள் பயன்படுத்தி இருக்க லாம் என தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகளுக்கு பேரிழப்பு
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் உட்பட பல்வேறு உயர் பொறுப்புகளை ஏற்று திறம்பட செயல்பட்டு சிறந்த பங்களிப்பை ஆற்றியவர். விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்க அவர் அளித்த பரிந்துரைகளை இதுநாள் வரையிலும் இந்திய அரசு அமல்படுத்தவில்லை. தேசத்தின் வேளாண் வளர்ச்சிக்கு அறிவியல் பூர்வமாக பங்களிப்பை ஆற்றியவர். விவசாய மேம்பாட்டிற்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கியவர். அவரது மறைவு இந்திய விவசாயிகளுக்கும், நாட்டிற்கும் பெரும் இழப்பு.
பெண் விவசாயிகளை அங்கீகரித்தவர்
எம்.எஸ்.சுவாமிநாதன் , விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு, காடுகள், மீனவளம் முதலான துறைகளில் பெண்களின் முக்கிய பங்களிப்பை அங்கீகரித்திருந்தார். அவருடைய ஆணையத்தின் அறிக்கையில் விவசாயத்தில் பெண்களின் பங்கு குறித்து தனிப் பிரிவே ஏற்படுத்தி இருந்தார். அன்னாரை இழந்து வாடும் அவருடைய மகள்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.
டி.கே.ரங்கராஜன் இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. வேளாண் துறையில் ஆராய்ச்சி செய்து அளப்பரிய சாதனைகள் செய்தவர். தேசிய விவசாயிகள் ஆணையத்தின் தலைவராக அவர் இருந்தபோதுதான் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டுமென பரிந்துரைத்தவர். இந்தியா மட்டுமல்லாமல் ஆசியாவில் உள்ள இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் இவரது பங்களிப்பு பாராட்டத்தக்கது. எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிய போது நானும் அவரோடு இணைந்து பணியாற்றியிருக்கிறேன். அவருடைய மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அவரது மறைவால் வாடும் அவரது மகள்களுக்கும், குடும்பத்தாருக்கும் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.