திருவனந்தபுரம், நவ. 8- சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்களில் கையெழுத்திடாத ஆளுநர் ஆரிப் முகமது கானின் நிலைப் பாட்டை எதிர்த்து கேரள மாநில அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஆளுநரின் நடவடிக்கையை கேள்விக்கு உட்படுத்தி மோடி அரசு உச்சநீதி மன்றத்தில் சிறப்பு அனுமதி மனுவைத் தாக்கல் செய்துள்ளது. “அரசமைப்புச் சட்டத்தையோ, ஜனநாயக விழுமியங்களையோ பின்பற்றா மல் இரண்டு ஆண்டுகளாக 8 மசோதாக் களை ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளார். மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் மசோதாக்களுக்கு ஆளுநர் செய்யும் இயற்கைக்கு மாறான தாமதம் அரசமைப்பு சாசனத்தின் 200ஆவது பிரிவுக்கு எதிரானது” என்று கேரள அரசு கூறியுள்ளது. “ஒன்றிய பாஜக அரசுக்கு சாதகமாக ஜன நாயக விரோதப் போக்கை ஆளுநர் கையில் எடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அவரை நேரில் சென்று சந்தித்து, மசோதாக்களில் ஆளுநர் கேட்ட விளக்கங்களையும் விவரங்களையும் அளித்த னர். எனினும், கேரள பல்கலைக்கழக சட்டங்கள் ஒருங்கிணைப்பு மசோதாவில் ஆளு நர் கையெழுத்திடாததால் துணைவேந்தர்கள் நியமனம் முடங்கியுள்ளது. கேரள பொது சுகாதார மசோதாவும் கையெழுத்திடப்பட வில்லை. “தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் ஆலோசனை மற்றும் உதவியின் பேரில் ஆளுநர் செயல்பட வேண்டும் என்று அரச மைப்பு சாசனம் தெளிவுபடுத்தியுள்ளது. விளக்கங்கள் திருப்திகரமாக இல்லை என்றால், அதைத் திருப்பி அனுப்ப வேண்டும் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். மசோதாவில் அரசமைப்பு சாச னத்துக்கு எதிராக ஏதேனும் பகுதி இருந் தால் கூறலாம். ஆனால், அவ்வாறு கார ணங்கள் எதையும் ஆளுநர் தெரிவிக்க வில்லை” என்றும் மனுவில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.