states

பெண்ணை துன்புறுத்திய கந்துவட்டி கும்பல் கைகட்டி வேடிக்கை பார்க்கும் கரூர் காவல்துறை

கரூர், நவ.6 - கணவன் வாங்கிய கடனுக்காக  மனைவியை கடத்தி, அடித்து துன்புறுத்தி, பாலியல் அத்து மீறலில் ஈடுபட்ட கந்துவட்டி கும்பலை கரூர் மாநகர காவல் துறை கைது செய்யாமல் குற்ற வாளிகளுக்கு ஆதரவாக செயல் படுகின்றது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், உடனடியாக கந்துவட்டி கும்பலை கைது செய்ய  வேண்டும் என கோரிக்கை விடுத் துள்ளது. கந்துவட்டி கும்பலால் பாதிக்கப் பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஞ்சி தாவை, கட்சியின் மாவட்டச் செய லாளர் மா.ஜோதிபாசு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம், வெள்ளி யணை அருகில் உள்ள தாளிய பட்டி ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வருபவர் நீலமேகம். இவ ரது மனைவி ரஞ்சிதா. இவர்கள் சாதி மறுப்பு திருமணம் செய்த  தம்பதியர். இருவரும் கரூரில் உள்ள டெக்ஸ் நிறுவனத்தில் கூலித்  தொழிலாளிகளாக உள்ளனர்.  நீலமேகம் தனது குடும்பச் செலவுகளுக்காக, கரூர் காமராஜ புரம் மேற்கு பகுதியில் உள்ள பாலு  பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு தாரர் பாலசுப்ரமணியன் என்பவரி டம், வீட்டு பட்டாவை அடமானம் வைத்து ரூ.60 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளார். வாங்கிய கடனுக் கான வட்டித் தொகையை  நீல மேகம் மாதந்தோறும் கட்டியுள் ளார். மூன்று மாதத்திற்கு முன்பு நீல மேகத்தின் உடல்நிலை மோச மாகி, மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வந்ததால், கடனுக்கான வட்டியை கட்ட முடியாமல் இருந்துள் ளனர். 

இந்நிலையில் கடந்த 28.10. 2023 அன்று மாலை 6.45 மணியள வில் டெக்ஸ் வேலைக்கு சென்று  விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்த  நீலமேகத்தின் மனைவி ரஞ்சி தாவை, கரூர் திண்ணப்ப தியேட்டர் அருகில், கந்துவட்டி பணம் கொடுத்த பாலசுப்பிரமணியம், இளவரசன், சசி, பொன்னுசாமி, சந்தோஷ் ஆகியோர் திடீரென வழிமறித்து நடுரோட்டில் தகாத  வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ள னர்.  சாலையில் சென்று கொண்டி ருந்த பொதுமக்கள் இந்த அநாக ரீக அத்துமீறலை கண்டிக்க முற்பட்ட நிலையில், கந்துவட்டி  கும்பல் அவர்களை மிரட்டியுள்ளது.  அடி மற்றும் தகாத வார்த்தைகளை தாங்க முடியாமல் பயந்த ரஞ்சிதா, அருகில் இருந்த தனி யார் மருத்துவமனையில் தஞ்சம் புகுந்துள்ளார். ஆனாலும், கந்து வட்டி கும்பல் அந்த மருத்துவ மனைக்குள் நுழைந்து ரஞ்சிதாவை  வெளியே இழுத்து வந்து வலுக் கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி பைனான்ஸ் அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளது. ஆட்டோ வில் செல்லும்போதே, ரஞ்சிதாவை  பாலியல் ரீதியாக துன்புறுத்தி யுள்ளது கந்துவட்டி கும்பல்.  பைனான்ஸ் நிறுவனத்தை அடைந்த பிறகு, கந்துவட்டி கும்பல் ரஞ்சிதாவை வலுக்கட்டாயமாக நிறுவனத்தின் உள்ளே இழுத்துச் சென்று, அவரின் ஆடைகளை கிழித்து கடுமையான பாலி யல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி யுள்ளது. இந்தத் தாக்குதலில் காய மடைந்த ரஞ்சிதாவின் மூக்கு, வாயில் ரத்தம் வந்துள்ளது. மேலும்,  அவரது கணவர் நீலமேகத்தின் செல்போனிற்கு கந்துவட்டி கும்பல்  தொடர்பு கொண்டு ரஞ்சிதா கடத்தப்பட்ட செய்தியை கூறி மிரட்டல் விடுத்துள்ளது. தொடர் தாக்குதலால் ரஞ்சிதா  மயக்க நிலைக்கு சென்ற நிலை யில், அவரை கந்துவட்டி கும்பல்  அறையை விட்டு வெளியே துரத்தி யுள்ளது. பாலியல் அத்துமீறல், கடுமையான தாக்குதலால் மிகவும்  பாதிக்கப்பட்ட ரஞ்சிதா உடனடி யாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார். கந்துவட்டி கும்பலின் இந்த அராஜகச் செயல் குறித்து நீல மேகம் உடனடியாக கரூர்  காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.  ஆனால் கரூர் மாநகர காவல் துறை கந்துவட்டி கும்பலை கைது  செய்யாமல், புகாரை கிடப்பில் போட்டுள்ளது. மேலும், கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாகவும், அவர் களை பாதுகாக்கும் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வரு கின்றனர். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தொழில் நகரமாக உள்ள கரூர்  மாவட்டத்தில், ஏழை-எளிய, தாழ்த்தப்பட்ட மக்கள் அதிக வட்டிக்கு பணம் வாங்கி, தங்களது  தேவைகளை பூர்த்தி செய்ய வேண் டியுள்ளது. இவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து, அதிக  வட்டி கேட்டு மிரட்டி வசூல் செய் கின்றனர்.  வட்டி மற்றும் வாங்கிய பணத்தை கொடுக்க முடியாத நிலையில், பெண்களை பொது வெளியில் தாக்குவது, பாலியல் ரீதி யாக துன்புறுத்துவது ஆகிய வற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக் கிறது.  கணவர் வாங்கிய கடனுக்காக, மனைவியை பொது வெளியில் அடித்தும், ஆபாசமாக பேசியும், கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய கந்துவட்டி கும்ப லின் இச்செயலை, கரூர் மாவட்ட  காவல்துறை வேடிக்கை பார்ப்பது  பல கேள்விகளை எழுப்புகிறது. கரூர் மாவட்டத்தில் தலை விரித்து ஆடும் கந்துவட்டி கொடு மையையும், கந்துவட்டி முறையை யும் முற்றிலும் தடுத்து நிறுத்து வதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைவில் எடுக்க  வேண்டும்.  மேற்கண்ட சம்பவம் குறித்து புகார் அளித்தும், குற்றவாளிகள் பைனான்சியர் பாலு, இளவரசன், சசி, பொன்னுசாமி, சந்தோஷ் ஆகி யோரை உடனே கைது செய்யா மல், காவல்துறை காலதாமதம் செய்கிறது. புகார் அளித்து 9 நாட்களை கடந்த நிலையில், கந்து வட்டி கும்பல் முன்பிணை கோரி நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. குற்றவாளிகளை கைது செய்யா மல் பாதுகாத்து வரும் கரூர் மாநகர காவல்துறையின் செயலை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  கண்டிக்கிறது.  மேலும் கரூர் மாவட்டம் மட்டு மின்றி, மாநிலம் முழுவதும் தலை விரித்தாடும் கந்துவட்டி கொடுமை களுக்கு தமிழ்நாடு அரசு விரை வில் முடிவு கட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.