சென்னை,நவ.9- சிஐடியு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு: தமிழ்நாடு மாநில வாணிப கழகம் (டாஸ்மாக் ) மாநி லம் முழுவதும் 5300-க்கும் மேற்பட்ட மதுபான சில்லரை விற்பனை கடைகளை நடத்தி வருகிறது. இக்கடைகளில் தனியார் உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் செயல்பட்டு வரு கின்றன. இந்த மதுக்கூடங்களில் உரிமம் காலம் 31.12.2021 ஆம் தேதியுடன் முடிவடைந்து, மறு உரிமத்திற்கான ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் துறை அமைச்சரது ஆதரவா ளர்களுக்கு பெருமளவில் உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்து மதுக்கூட உரிமதாரர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கு கரூர் கம்பெனி என்ற பெயரில் ஒருவர் வீதம் நியமிக்கப்பட்டு, அந்த நபர்கள் டாஸ்மாக் அதிகாரிகள் துணையுடன் உரிமம் இல்லாத மதுக்கூடங்கள், உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் என இரண்டு வகையாக பிரித்து மாமூல் வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
டாஸ்மாக் கடைகளில் விற்பனை அடிப்படையிலும், விற்ப னையாகும் மது பாட்டில் அடிப்படையிலும் தினசரி மாமூல் கொடுக்க வேண்டுமென ஊழியர்களை மிரட்டி வருகின்ற னர். இது குறித்து காவல் துறை தலைமை இயக்குனருக்கு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் சார்பில் 18.10.2022 அன்று உரிய ஆதாரங்களுடன் புகார் மனு அளிக்கப் பட்டது. இந்த நிலையில் கரூர் கம்பெனி கும்பல் கோவை, சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஊழியர்க ளை மாமூல் கேட்டு மிரட்டி வருகிறது. மாமூல் தர மறுக்கும் ஊழியர்களை டாஸ்மாக் அதிகாரிகளை கொண்டு பணி யிடமாற்றம் செய்யும் அளவுக்கு துணிந்துள்ளனர். இந்த கும்பலால் கடை ஊழியர்களின் உயிருக்கும், உட மைக்கும் ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பாக இப் பிரச்சனையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு முதல மைச்சர் தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.