புதுதில்லி, மே 3- ‘பிரதமர் நரேந்திர மோடி, கோட்சேவை கடவுளாகக் கருதக் கூடியவர்’ என்று டுவிட்டரில் பதி விட்டதற்காக, குஜராத் மாநில சுயேச்சை எம்எல்ஏவும், தலித் உரிமைகள் அமைப்பின் தலைவ ருமான ஜிக்னேஷ் மேவானியை, அசாம் பாஜக அரசின் காவல்துறை கடந்த ஏப்ரல் 19 அன்று கைது செய்தது. இந்த வழக்கில் ஜிக்னேஷ் மேவானி ஜாமீன் பெற்ற நிலையில், பெண் காவலரைத் தாக்கினார், அவ ரிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டார் என்று புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்து, சிறையில் இருந்து வெளிவராமல் பார்த்துக் கொண்டது. ஆனால், இந்த வழக்கிலும் ஜாமீன் வழங்கிய பார்பேட்டா நீதிபதி அபரேஷ் சக்கரவர்த்தி, “குற்றச் சம்பவ விஷயத்தில், ஜிக்னேஷ் மேவானி மீதான வழக்குப்பதிவு விவ ரங்கள் ஒத்துப்போகவில்லை. இவ் வழக்கு சம்பந்தப்பட்ட நபரை, நீண்ட காவலில் வைக்க திட்டமிட்டது போல் தெரிகிறது. இரண்டு ஆண் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் ஒரு பெண் போலீஸ் அதிகாரியை விவே கமுள்ள எந்தவொரு நபரும் தாக்கு வதற்கு முயற்சிக்க மாட்டார்கள்” என்று கூறினார். “போராடி பெற்ற ஜனநாய கத்தை, போலீஸ் ராஜ்ஜியமாக மாற்றிவிடாதீர்கள்” எனவும் அசாம் காவல் துறைக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், சிறையிலிருந்து விடுதலையான ஜிக்னேஷ் மேவானி, ஊடகங்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேர வைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், தோ்தலில் பாஜகவின் வெற்றிக்குத் தடையாக இருப்பேன் என்பதால் என்னை முடக்க நினைக் கின்றனர்; அசாம் காவல் துறை யினர் என்னைக் கைது செய்த விவ காரமானது, பிரதமர் அலுவலகம் திட்டமிட்டு நிறைவேற்றிய சதித் திட்டம். பிரதமர் அலுவலகத்திலும் கோட்சே பக்தர்கள் உள்ளனர். அவர்கள்தான் எனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யத் தூண்டி னர். குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு பயந்து என் மீது 56 அங்குல மார்பைக் கொண்ட கோழை (பிரதமர் மோடி) இந்த நடவடிக்கை யை எடுத்துள்ளார்” என்று ஜிக்னேஷ் மேவானி கடுமையாக சாடியுள்ளார். “குஜராத்தின் வட்காம் பகுதி யைச் சேர்ந்த தலித்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினர் மீது போடப்பட்டுள்ள போலி வழக்கு களை திரும்ப பெற வேண்டும். இல்லையெனில், ஜூன் 1-இல், குஜராத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்” என்றும் ஜிக்னேஷ் மேவானி எச்சரித்துள் ளார்.