ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த ஜேசன் என்பவர் 24 மணிநேரத்தில் 8,008 புல் அப்ஸ் (ராணுவ, போலீஸ் தேர்ந்தெடுப் பில் முக்கியமானது) எடுத்து கின்னஸ் சாத னை படைத்துள்ளார். ஒரு சாதாரண இளைஞர் சரா சரியாக இடைநில்லாமல் 200 புல் அப்ஸ் எடுப்பதே மிகவும் கடினமான காரியம் என்பது குறிப் பிடத்தக்கது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்க த்தில் வெளியாகி 3 மாதத் தில் உலகம் முழுவதும் 19 ஆயிரம் கோடி வசூலை குவித்த “அவதார் 2” திரைப்படம் சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உலகின் முதன்மையான திரைத்துறை விருதான ஆஸ்கர் விருது வரும் 12-ஆம் தேதி அமெரிக்கா வில் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசுப் பேருந்து சேவை தொடர் பான தகவல் பெற, சேவை தொடர்பான புகார்கள் அளிக்க இலவச எண் “18005991500” மற்றும் பிரத்யேக இணை யதளத்தை அறிமுகம் செய்தார் போக்கு வரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்.
உலகில் உள்ள 5 பெருங் கடலில் 20 லட்சம் டன் பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளதாக அமெரிக்க சுற்றுச்சூழல் நிறுவனம் ஆய் வறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகச் செய்திகள்
இஸ்ரேல் அரசுடனான உறவைக் குறைத்துக் கொள்வது என்ற தீர்மானத்திற்கு தென் ஆப்பிரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பாலஸ்தீன மக்கள் மீது நடக்கும் வன்முறை வெறியாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். ஒருவேளை நெல்சன் மண்டேலா உயிரோடு இருந்திருந்தால், இந்த முடிவை முழுமையாக ஆதரிப்பார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
மின் கட்டணம் உயர்ந்து கொண்டே போனால் பெரும் அளவில் வேலையிழப்பு இருக்கும் என்று பல்வேறு தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. இந்த சங்கங்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “தொழிற்துறைக்கான மின் கட்டண விவகாரத்தில் ஜெர்மனி அரசு உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் உருக்கு, அலுமினியம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் இயங்குவதில் நெருக்கடி ஏற்படும்” என்று தெரிவித்துள்ளன.
இமயமலையில் ஏறுவதற்காக வருபவர்கள் உள்ளூர் வழிகாட்டி களைப் பயன்படுத்த வேண்டும் என்று நேபாள அரசு ஆணை யிட்டுள்ளது. நேபாளத்தின் இமயமலைப் பகுதிகளில் மலையேற விரும்புபவர்களுக்கு இது கட்டாயம் என்றும் அரசு அலுவலர்கள் தெரி விக்கின்றனர். ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த விதி நடைமுறை க்கு வருகிறது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் உள்ளூர் வழிகாட்டி களுக்கு வேலைவாய்ப்பு ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டே இந்த விதி கொண்டு வரப்பட்டுள்ளதாகவும்கூறியுள்ளனர்.