சென்னை,டிச.13- ‘மாண்டஸ்’ புயல் கரையை கடந்தாலும் சென்னையில் தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருக்கிறது. வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கனமழை பெய்தும் வருகிறது. தொடர் மழை காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறி வரத்து பாதிக்கப் பட்டிருக்கிறது. இதன் தாக்கம் காய்கறி விலையில் எதிரொலித் துள்ளது. இதனால் காய்கறி விலை ஓரிரு நாளிலேயே ‘கிடுகிடு’வென உயர்ந்திருக்கிறது. கோயம்பேடு சந்தைக்கு வழக்கமான காய்கறி வரத்து மழை யால் பாதிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு ரூ.20 வரை விற்பனையான ஒரு கிலோ பீன்ஸ், அவரை உள்ளிட்ட காய்கறி தற்போது ரூ.30 முதல் ரூ.35 வரை விற்கப்பட்டது. ரூபாய் 12 முதல் 17 வரை விற்பனையான தக்காளி, தற்போது ரூ.30 வரை விற்கப்படுகிறது. முருங் கைக்காய் விலையும் ரூ.30 வரை உயர்ந்திருக்கிறது. தற்போது மழை குறைந்திருப் பதால், நிலைமை சீரடையும் பட்சத்தில் காய்கறி விலை ஓரிரு நாளில் குறைந்து முன்புபோலவே விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.