states

img

தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி உயிரிழப்பு

சென்னை, செப். 4- ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட்டவுன்களுக்கு குரல் கொடுத்த இந்திய  விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) விஞ் ஞானி வளர்மதி மாரடைப் பால் உயிரிழந்தார். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண் வெளி மையத்திலிருந்து கடந்த ஜூலை 14ஆம் தேதி நிலவின் தென்துருவத்தை அடைவதற்காக இந்தியா வின் சார்பில் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம். ஆகஸ்ட் 23ஆம் தேதி சந்திரயானின் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை நிலவின் மேற்பரப்பை தொட்டது. அதனடிப்படையில் நிலவின் தென்துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா அடைந்தது. சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்டிருக்கும் விக்ரம் லேண்டரும், பிரஞ்யான் ரோவரும், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தென்துருவப் பகுதியின் மேற்பரப்பில் அறிவியல் பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தன.

அந்த வகையில் இஸ்ரோ வில் ராக்கெட் ஏவப்படும்  போது வர்ணனை செய்யும் பெண் குரலுக்கும் தனி ரசிகர்கள் உண்டு. அந்த குரலுக்கு சொந்தக்காரர் விஞ்ஞானி வளர்மதி.   கடந்த 6 ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய முக்கிய ஏவுகணை நிகழ்வுகளின் போது வளர்மதி வர்ணனை யாளராக பணியாற்றியுள் ளார். 2012ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ரிசாட்-1 திட்ட இயக்குநராகவும் செயல்பட்டு இருக்கிறார். அரியலூரில் பிறந்து தமிழ் வழியில் பள்ளிப் படிப்பைப் பயின்ற வளர்மதி, பொறியி யலில் முதுநிலைப்பட்டம் முடித்து, 1984ஆம்  ஆண்டு இஸ்ரோ பணியில் சேர்ந்தார். 2015ஆம் ஆண்டு  அப்துல் கலாம் நினைவா கத் தமிழ்நாடு அரசால் அவருக்கு விருது வழங்கப் பட்டது. 50 வயதாகிய வளர்மதி யின் குரலுக்கு பிரபல  விஞ்ஞானிகளும் ரசிகர்க ளாக உள்ளனர். இத்தகைய குரலுக்கு சொந்தக்காரரான விஞ்ஞானி வளர்மதி சென்னையில் உள்ள மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திங்க ளன்று (செப். 4) உயிரி ழந்தார். அவரது மறை வுக்கு விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.