states

img

கல்வான் பள்ளத்தாக்கில் தேசியக் கொடியை ஏற்றிய இந்திய வீரர்கள்

லடாக், ஜன.5- புத்தாண்டு தினத்தன்று கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் தேசிய கொடியை ஏற்றியுள்ளனர்.  கடந்த 2020ஆம் ஆண்டில் லடாக் எல்லையை ஒட்டிய கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைய முயன்றனர். அப்போது இந்திய - சீன வீரர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.  இந்நிலையில், லடாக் பகுதி யில் பதற்றமானச் சூழல் நிலவும் நிலையில், அதனை தணிப்பது தொடர்பாக இருதரப்பு ராணுவ அதிகாரிகளும் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த சூழலில், புத்தாண்டு தினத்தன்று கல்வான் பகுதியில் சீனக் கொடியை உயர்த்திப் பிடிப்பது போன்று அந்நாட்டு ராணுவ வீரர்கள் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளி யிட்டிருந்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் தேசியக் கொடியை இந்திய ராணுவ வீரர் கள் ஏற்றிய நிலையில், புகைப் படம் வெளியிடப்பட்டுள்ளது.