தருமபுரி மாவட்டம் ராமியணஅள்ளி யில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், ஆவின் தயாரிப்பு பொருட்களான பட்டர், சீஸ், பனீர் உள்ளிட்டவை தரமானதாகவும், சுவையானதாகவும் உள்ளதால் தேவை அதிகமாக உள்ளது. இதனால் மேலும் உற்பத்தியை அதிகப்படுத்தவும், கூடுத லாக சந்தைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆவின் பொருட்களுக்கு மக்களி டையே நல்ல வரவேற்பு உள்ளதால் கடந்த தீபாவளியை விட நிகழாண்டில் 25 சதவீதம் ஆவின் இனிப்புகளுக்கு தேவை அதிகரிக்கும் என்பதால் அதற்கு ஏற்ப தயாரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படிப்படியாக பால் உற்பத்தி யை அதிகரிப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரி வித்தார்.