பெண் குழந்தை பிறந்தால் அதன் பெற் றோருக்கு 2 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் ஆளும் இமாச்சல பிரதேச அரசு அசத்தல் அறிவிப்பை வெளியிட் டுள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள எர்ரகுண்டலா அருகே தேசிய நெடுஞ் சாலையில் மாநில அரசு பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
கடந்த சனியன்று பாலஸ்தீனத்தை ஆக்கிர மித்த இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் படை யினர் தாக்குதல் தொடுத்தனர். ஹமாஸ் படையின் தாக்குதலால் பாலஸ்தீனத்தின் ஒருபகுதியான காசா மீது போர்ப் பிரகடனம் செய்து, அங்கு தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது இஸ்ரேல் ராணு வம். பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் ராணுவ தாக்கு தலை கண்டித்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இஸ்ரேலில் ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தி வரும் பகுதியில் இருந்த கேரள மாநி லத்தை சேர்ந்த ஷீஜா ஆனந்த் (வயது 41) என்ற பெண் செவிலியர் படுகாயமடைந்துள்ளதாக தக வல் வெளியாகியுள்ளது. ஷீஜா ஆனந்த் இஸ்ரே லில் கடந்த 7 ஆண்டுகளாக செவிலியராக பணி யாற்றி வருகிறார். மேலும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் இஸ்ரேலில் சிக்கியுள்ளதாகவும், தங்களை இந்திய அரசு காப்பாற்ற வேண்டும் என வீடியோ வெளியிட்டுள்ளனர்.
உயர்நீதிமன்றங்களில் 14 நீதிபதிகளை பணி யிட மாற்றம் செய்யும் கொலீஜியம் பரிந் துரை மீது முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 பரிந்துரைகள் பரிசீலனையில் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இயக்குனர் அட்லீ இயக் கத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்த “ஜவான்” திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1117.39 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
மத்தியப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 57 வேட்பாளர்களின் பட்டி யலை பாஜக வெளியிட்டது. இதேபோல் ராஜஸ்தா னில் 41 தொகுதிகளிலும், சத்தீஸ்கரின் 64 தொகுதி களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை யும் பாஜக வெளியிட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனத்துக்கு ரூ.194.61 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பிஇசியின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அருண்குமார் மிர்சந்தானி மற்றும் முன்னாள் அதிகாரிகள் மீது சிபிஐ புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது.