states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

விவசாயிகள்  சங்க கிளை அமைப்பு

விருதுநகர், ஏப்.22- விருதுநகர் தெற்கு ஒன்றியம் எ.புதுப் பட்டியில் கிராமத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் புதிய கிளை அமைக்கப்பட்டது. இதில், மாவட்ட செயலாளர் வி..முருகன்  தெற்கு ஒன்றிய செயலாளர் சேதுராமசாமி,  விவசாயிகள் சங்க  நிர்வாகிகள்  பால்ச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர் . தலைவராக கே. கருப்பசாமி, செயலாளராக  எம்.செய்யது காட்டுவா, பொருளாளராக பி.கருப்பசாமி, உதவி தலைவராக மகேஸ்வரி, உதவி செயலாளராக முனீஸ் வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

போடியில் கட்டிடத்தில் இருந்து விழுந்த பெண் பலி

தேனி, ஏப்.22- போடி குலாலர் பாளையம் ரெங்கசாமி தெருவில் வசிப்பவர் மனோக ரன். இவரது மனைவி  நாகேஸ்வரி (46). இருவரும் கட்டுமான தொழிலாளர்கள். ஏப்ரல் 15 ஆம் தேதி நாகேஸ்வரி குலாலர் பாளையத்தில் சுப்புராஜ் என்பவரது வீட்டில் மாடியில் வேலை செய்து வந்துள்ளார். படியிலிருந்து இறங்கும்போது தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக் கிழமை இறந்து போனார். இது குறித்து மனோகரன் மகன் மோகன்ராஜ் (29) கொடுத்த புகாரின் பேரில் போடி நகர் காவல் நிலையத்தில்  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கார் கவிழ்ந்து விபத்து: குழந்தை பலி

சாத்தூர், ஏப்.22- சாத்தூர் அருகே கார்  விபத்துக்குள் ளானதில் 3 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரி ழந்தது. கன்னியாகுமரி மாவட்டம் ஆமணக்கு விளை பகுதியைச் சேர்ந்தவர் சுயம்புதாசன். இவரது மகன்கள் லிங்கேஸ் (36), சதீஷ் (34). இருவரும் சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இருவரது குடும்பத்தினரும், சென்னையில் இருந்து சொந்த ஊரான ஆமணக்கு விளைக்கு  தங்களது காரில் புறப்பட்டு வந்தனர். காரை சதீஷ் ஓட்டினார். சாத்தூர் அருகே உள்ள பெத்து ரெட்டியபட்டி விலக்கு அருகே வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து  அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் லிங்கேஸ் மகள் லியா ஆதிரா (3) தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயி ரிழந்தது. லிங்கேஸ் மற்றும் சதீஷ் இருவரது மனைவி மற்றும் 2 குழந்தை கள் என 6 பேர் காயமடைந்தனர். இதை யடுத்து, அக்கம் பக்கத்தினர் அனைவ ரையும் மீட்டு,  சாத்தூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேஸ் சிலிண்டர் வெடித்து பெண் படுகாயம்

வெம்பக்கோகாட்டை , ஏப்.22- வெம்பக்கோட்டை அருகே சமையல் எரிவாயு உருளை வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளானதில் இளம் பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.   வெம்பக்கோட்டை பேர்நாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரது மகள் ரேவதி (25). மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக  பணியாற்றி வந்தார். கடந்த 2020ம் ஆண்டு இவருக்கும், சிப்பிபாறையை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்தது.  செல்வராஜ் வெளிநாட்டில் வேலைக்கு சென்றிருந்தார். இந்தநிலையில் இரு வீட்டாருக்கும் இடையே வரதட்சணை  நகை தொடர்பாக பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரேவதியின் தாயார் விஜயலட்சுமி மற்றும் உறவினர்கள் செல்வராஜ் வீட்டிற்கு சென்று பேசினர். இதற்கிடையே சம்பவத் தன்று ரேவதி தனது தாயாரிடம் செல்போனில் பதற்றத்துடன் பேசியுள்ளார். சிறிது நேரத்தில் அவரது செல்போன் சுவிட்ச்  ஆப் செய்யப்பட்டது. உடனே விஜய லட்சுமி, ரேவதியின்  பக்கத்து வீட்டில் வசிப்பவர் களை தொடர்பு கொண்டு விசாரித்தபோது கேஸ் சிலிண்டர் வெடித்து படுகாயங்களுடன் ரேவதி. மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த விஜய லட்சுமி, இது குறித்து  சாத்தூர் அனைத்து  மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி ரேவதியின் கணவர் செல்வராஜ், அவரது தாயார் கல்யாணி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.

பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் வேளாண் மின் இணைப்பு

தேனி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார்

தேனி ஏப்.22- தேனி மாவட்டம்  கடமலை -மயிலை ஒன்றி யத்தில் பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே  வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்படுவ தாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது . தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் தலைமை யில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலு வலர் தி சுப்பிரமணியன்,  மாவட்ட ஆட்சிய ரின் நேர்முக உதவியாளர்(விவ) கா.முத்து லட்சுமி மற்றும் அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் மற்றும் ஏராள மான விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்   தெரிவித்ததாவது:- தேனி மாவட்டத்தில்  நடப்பு சாகுபடி க்குத் தேவையான உரங்களான யூரியா 705 மெ.டன்னும்,  பொட்டாஷ் 342 மெ.டன் மற்றும் கலப்பு உரங்கள் 2190 மெ.டன்னும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவை யான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், உரம் கிடைப்பதில் பிரச்சனை மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வது பற்றி வேளாண்மை உதவி இயக்குநரை (த.க)   98949 47952 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். பாரத பிரதமரின் கௌரவ நிதித் திட்டத்தின்கீழ், ஆண்டுக்கு ரூ.6000- பெற தேனி மாவட்டத்தில் புதிதாக பதிவு செய்த 742  விவசாயிகரள சரிபார்க்கும் பணி வருவாய் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்களால் மேற்கொள் ளப்பட்டு வருகிறது என்றார். கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்ட செயலாளர் டி.கண்ணன், கடமலை ஒன்றியத்தில் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேளாண் மின் இணைப்புகள் கொடுக்கப்படுகிறது .பணம் தராத விவசா யிகளுக்கு மின் இணைப்பு தராமல் இழுத்த டிக்கபடுகிறது. தேனி மாவட்டத்தில் விவசா யிகளுக்கு தேவையான உரங்கள் கொடுக் கப்படுவதில்லை .இதை மொத்தமாக அவர்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள் .நாட்டு மாடுகள், பாரம்பரிய மலை மாடுகளை சரணாலயம், காப்பகம், பூங்கா  உள்ளிட்ட இடங்களில் மேய்க்க நீதி மன்றம் தடை விதித்து தீர்ப்பு வழங்கி யுள்ளது. இதில் தமிழக அரசு மேல் முறையீடு செய்யவேண்டும்.என்றார் . கூடலூரை சேர்ந்த விவசாயி ,கூடலூர் சாமி வாய்க்கால் மதகு உடைந்து விட்டது. இதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வீரபாண்டியில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அங்கு தனியார் மற்றும் அரசு டாஸ்மாக் மதுபான கடையை அடைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். சூறைக்காற்றினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி யும், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கண்மாய்களில் எடுக்கப் படும் வண்டல் மண் அளவை வரையறை செய்தும், அதிகப்படியான வண்டல் மண் எடுப்பதை தடுக்க தக்க நடவடிக்கை மேற் கொள்ள கோரியும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

தொழிலாளர்களை சுரண்டும் போக்கை தடுக்க வேண்டும்: தினக்கூலி தூய்மைப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்த  தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

 மதுரை மாநகராட்சி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி 

மதுரை, ஏப். 22-  தினக்கூலி அடிப்படையில் பணியிலுள்ள தூய்மைப் பணியாளர்களை  பணி நிரந்தரம்  செய்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய கோரி மாநகராட்சி தொடர்ந்த வழக்கை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து,தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது. மதுரை மாநகராட்சியில் 2006 முதல் 2007 வரை தினக்கூலி அடிப்படையில் தூய்மைப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டவர்களில்  389 பேர் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி 2010-இல் தொழிலாளர் ஆய்வாளர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை  விசாரித்த தொழிலாளர் ஆய்வாளர் 309 பேரை யும் பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மாநகராட்சி சார்பிலும், தொழிலாளர் ஆய்வாளர் உத்தரவை அமல்படுத்தக்கோரி தூய்மைப் பணியாளர்கள் சார்பிலும் உயர் நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, மாநகராட்சி மனுக்களை தள்ளுபடி செய்தும், தூய்மை பணியாளர்களின் மனுக்களை ஏற்று அவர்களை பணி நிரந்தரம் செய்யவும் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை மாநகராட்சி ஆணையர் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்தார்.  இதனை நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வு வெள்ளியன்று விசாரித்தது.  அப்போது நீதிபதிகள் கூறுகையில் ,” ஒன்றிய, மாநில அரசுகள் தங்களை மக்கள் நல அரசுகள் என சொல்லி வருகின்றன. ஆனால்  அதற்கு மாறாக அரசு துறைகள், மாநகராட்சி களில் நிரந்தர பணியாளர்கள் பார்க்கும் பணி களில்  தற்காலிக பணியாளர்களை நியமித்து தொழிலாளர்கள் விரோத நடவடிக்கையை மேற் கொள்கின்றன.  பெரும்பாலான நேரங்களில் தற்காலிக நியமனங்கள் பணி விதிகளை பின்பற்றாமல் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் பொது வேலை வாய்ப்பில் சம வாய்ப்பு மறுக்கப்படுகிறது. நிரந்தர பணியிடங்களில் குறைந்த சம்பளத்தில் தற்காலிக அடிப்படையில் பணியாளர்களை நியமித்து தொழிலாளர்களை சுரண்டும் போக்கை தடுக்க வேண்டும்.  பணி நியமனங்களுக்கு தனி விதிகள் உள்ளன. இருப்பினும் உத்தரவுகள் பிறப்பித்த இதுபோன்ற பின்வாசல் நியமனங்களும் நடை பெறுகின்றன. எதிர்காலத்தில் நிரந்தர பணியா ளர்களை மேற்கொள்ளும் பணியிடங்களில் குறைந்த ஊதியத்துக்காக தற்காலிக அடிப்ப டையில் பணியாளர்களை நியமிக்கும் போக்கை அரசு நிறுத்தும் என நம்புகிறோம்” என்று குறிப்பிட்டு தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்த தனி நீதிபதி உத்தரவை  உறுதி செய்து உத்தரவிட்டனர். 

மண்டபம் மீனவர்கள்  4 பேர் விடுதலை 

இராமேசுவரம்,ஏப்.22:  இராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் இருந்து சென்று கடந்த மாதம் 23 ஆம் தேதி  கச்ச்தீவு நெடுந்தீவுக் கிடையே மீன்பிடித்துக்கொண்டிருக்கும் சதீஸ்(38)வேலா யுதம்,ராஜாகனி,நிஷர்அலி ஆகிய நான்கு மீனவர்களை இலங்கை கடற்பைடயினர் கைது செய்தனர். படகு பறிமுதல் செய்யப்பட்டதுடன் மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைத்தனர்.   இந்நிலையில், 28 நாட்களுக்கு பின் வெள்ளிக்கிழமை நான்கு மீனவர்கள் மீண்டும் ஊர்க்காவல்துறை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நான்கு மீனவர்கள் இனி மேல் இலங்கை கடற்பகுதிக்குள் மீன்பிடிக்க வரக்கூடாது என எச்சரித்து விடுதலை செய்தனர். ஆனால் படகை விடுவிக்கவில்லை. விடுவிக்கப்பட்ட நான்கு மீனவர்கள் யாழ்பாணம் இந்திய துணைதூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஓரிரு நாட்களில் நாடு திரும்ப உள்ள தாக தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.