states

தடை செய்தும் கிடைக்கும் ஆன்லைன் விளையாட்டுகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

மதுரை, செப் 13-  தடை செய்யப்பட்டும் ப்ரி பயர் ஆன்லைன் விளை யாட்டு எவ்வாறு ஆன்லைனில் கிடைக்கிறது என்றும் இதன்  மீது  சைபர் குற்றப்பிரிவு காவல்துறை ஏன் கடும் நட வடிக்கை எடுக்கவில்லை என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நாகர்கோவிலைச் சேர்ந்த அயறின் அமுதா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு வில், எனது மகள் இதழ் வில்சன் நாகர்கோவிலில் உள்ள  தனியார் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படித்து  வருகிறார். இந்நிலையில் எனது மகள் கடந்த ஆறாம்  தேதி முதல் காணவில்லை. இது குறித்து கன்னியாகுமரி வடசேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். புகா ரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனது மகள் பப்ஜி  மற்றும் ஃபிரீ ஃபயர் ஆகிய ஆன்லைன் விளையாட்டு கள் மீது அதிக ஆர்வம் காட்டியதால் இதன் மூலம் என்  மகளுக்கு ஜெப்ரின் என்பவன் பழக்கமாகி உள்ளான் .எனவே அவன்தான் எனது மகளை கடத்தியிருக்க வேண்டும். எனவே எனது மகளை மீட்டுத்தர காவல்  துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி மகாதேவன் அமர்வு முன்பு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள் ,இந்திய அரசால் ஆன்லைன் விளையாட்டுகளான ஃப்ரீ ஃபயர் தடை செய்யப்பட்டு விட்டது. இருந்த போதும் இந்த விளை யாட்டை எவ்வாறு மீண்டும் விளையாட முடிகிறது.  சைபர் குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து என்ன நட வடிக்கை எடுத்துள்ளார்கள் ஏன் கடும் நடவடிக்கை எடுக்க வில்லை என்று கேள்வி எழுப்பினர்.இது போன்ற விளை யாட்டுகளால் இளைய சமுதாயம் வீணாகுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தடை செய்யப்பட்ட இதுபோன்ற விளையாட்டுகள் ஆன்லைனில் கிடைக்காமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இதுகுறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி வழக்கு விசா ரணையை ஒத்திவைத்தனர்.

;