அகமதாபாத், நவ.28- குஜராத் சட்டப்பேரவைத் தேர்த லில், முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 89 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதனால், இன்று தலைவர்கள் உச்ச கட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். 182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1, டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப் பட்டு, முதற்கட்டத் தேர்தல் நடை பெறும் 89 தொகுதிகளுக்கு, நவம்பர் 5ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் 93 தொகுதி களுக்கு நவம்பர் 10-ஆம் தேதியும் வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்றது. இதில், தேர்தல் ஆணைய புள்ளி விவரங்களின்படி 182 தொகுதி களில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சி கள் சார்பிலும், சுயேட்சைகளாகவும் மொத்தம் 1,621 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வேட்பாளர்களை ஆத ரித்து பாஜக சார்பில் பிரதமர் நரேந் திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, உ.பி. முதல்வர் ஆதித்ய நாத், காங்கிரஸ் சார்பில் அக்கட்சி யின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், ஆம் ஆத்மி சார்பில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்நிலையில், முதற்கட்டத் தேர்தல் நடைபெறும் 89 தொகுதி களில் நவம்பர் 29-ஆம் தேதி மாலை யுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இத னால், செவ்வாயன்று தலைவர்கள் இறுதி மற்றும் உச்சக்கட்ட பிரச்சா ரத்தில் ஈடுபடுகின்றனர். நவம்பர் 30 ஓய்வு நாளாகும். அதைத்தொடர்ந்து டிசம்பர் 1-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.