சென்னை, ஆக.6- முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை (ஆக.6) அதிகாலையில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலை யில் மாரத்தான் போட்டிநடைபெற்றது. இந்த விழாவில், அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் கலந்துகொண்டு கொடி யசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர்கள் மா.சுப்பிர மணியன், கே.என்.நேரு மற்றும் மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த மாரத்தானில் அரசு உயர் அதிகாரிகளான அதாவது ஐஏஎஸ், ஐபிஎஸ், காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள் என 500க்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர். அதேபோல் கட லோர காவல் படை, ராணுவ வீரர்கள் 1500 பேரும் கலந்து கொண்டனர். மேலும், பல்வேறு வெளிநாட்டு தூத ர்கள் வருகை தந்தனர். மொத்தமாக 50,629 ஆண்கள், 21,514 பெண்கள், திருநங்கைகள், திருநம்பிகள் 1,063 என்று 70,206 பேர் பங்கேற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். சென்னை தீவுத் திடலில் நடந்த பரிசளிப்பு விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி உரையாற்றினார். அப்போது, “இது சாதாரண மாரத்தான் அல்ல, இது சமூக நீதி மாரத்தானாக அமைந்திருக்கிறது” என்றார். இந்த மாரத்தான் போட்டியில் நுழைவுக் கட்டணமாகச் கிடைத்த ரூ.3.42 கோடி நிதியை முதலமைச்சரி டம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அந்த தொகை முழுவதும் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கட்டிடம் கட்ட பயன்படுத்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.