states

சேலம் மாற்றுத் திறனாளி மாணவியின் மருத்துவ, கல்விச் செலவை ஏற்றது அரசு

சேலம்,ஜூலை 4- சேலம் மாவட்டம், இளம்பிள்ளை கல்பரப்பட்டி செவ்வாய்காடு பகுதியை  சேர்ந்தவர் வெங்கடாசலம். தறி தொழி லாளி. இவரது மனைவி மாரியம்மாள். இந்த தம்பதிக்கு பூங்கொடி மற்றும் அமுதா ஆகிய 2 மகள்கள். இதில்  இளைய மகள் அமுதா, மாற்றுத் திறனாளி ஆவார். கடந்த ஜூன் 6ஆம் தேதி  மாமியார்  வீட்டுக்கு செல்வதற்காக வெங்கடாச லம், தனது மனைவி மாரியம்மாள், மகள் பூங்கொடி ஆகியோரை அழைத்துக்  கொண்டு இரு சக்கர வாகனத்தில் மல்லூருக்கு சென்று விட்டு திரும்பிய போது கார் மோதி விபத்துக்குள்ளாகி 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். இளைய மகள் அமுதா மட்டும்  வீட்டில் இருந்ததால் உயிர் தப்பினார்.  12 ஆம் வகுப்பு பொது தேர்வில் அமுதா முதல் மதிப்பெண் எடுத்துள் ளார். ஆனால், பெற்றோரை இழந்த தால் அவரால் மேற்படிப்பை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அவர் பலரிடமும் உதவி கோரினார். இதுபற்றி அமுதா உருக்கமாக கூறியதாவது:- எனக்கு உடல் சார்ந்த  பிரச்சனை சின்ன வயதிலிருந்தே இருக்கிறது. நான் அதையும் மீறி படிக்கணும் என நோக்கமாக இருந் தேன். எனக்கு படிக்கணுங்கிற ஊக்கம்  கொடுத்தது அப்பா, அம்மா தான். பள்ளிக்கு அக்கா தான் என்னை  கூட்டிட்டு போயிட்டு வருவாங்க. நான்  ரொம்ப சிரமப்பட்டு கொண்டிருந் தேன். பிறகு தான், மருத்துவ  மனைக்கு சென்று மருத்துவம் பார்த்தேன். அதற்கு அப்புறம் கொஞ்சம் சரியானது. 11, 12 ஆம் வகுப்புகளில் நான் தான் முதல் மதிப்பெண். ஆனால் இப்ப  அந்த சந்தோஷத்தை கொண்டாட என்னோடு யாரும் இல்ல.

 என்னுடைய குடும்பத்தில் யாரும் இல்லனாலும் குடும்பத்துல  ஒருத்தரா அரசு முன்வந்து உதவி  செய்யணும் என எதிர்பார்க்கிறேன். என்னுடைய ஆசை நிறைவேற்ற னுன்னா தயவு செய்து அரசு தொடர்ந்து  உதவி செய்யணும். இதை என்னுடைய  வேண்டுகோளாக வைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்திருந் தார். இதையடுத்து சமூக ஆர்வலர்கள் சிலர் அவருக்கு கல்லூரியில் சேர உதவி செய்தனர். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இது பற்றி தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவி  அமுதாவுக்கு தேவையான அனைத்து  உதவிகளையும் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். இதையடுத்து, சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆட்சியர் கார்மே கம் மாணவியை அழைத்து ஆறுதல்  தெரிவித்ததோடு, வாழ்வின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்வ தாகவும், மருத்துவ செலவு, கல்வி கட்ட ணம் மற்றும் விடுதி கட்டணத்திற்கான செலவை ஏற்பதாக உறுதி அளிக்கப்பட்டது. மேலும் மாணவிக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு கட்டிக் கொள்ள வீரபாண்டி கல்பரப்பட்டியில் பசுமை  வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இலவச  வீட்டு மனைக்கான ஆணையை மக்கள் குறைதீர்க்கும் முகாமில் ஆட்சி யர் வழங்கியதோடு, வீடு கட்டிக் கொள்ள போதுமான நிதியையும் ஒதுக்கீடு செய்தார். இதை தொடர்ந்து மாணவி அமுதா,  என்னுடைய கோரிக்கையை ஏற்று உதவி செய்த தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தார்.

;