சென்னை,ஜூலை 6- அரசியல்வாதி போல் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார். அவரது அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கூறியுள்ளார். இது தொடர்பாக, சென்னை தலை மைச் செயலகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி செய் தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சிண்டிகேட், செனட் கூட்டங்கள் பல்கலைக்கழகங்களில் நடைபெறுவ தில்லை என ஆளுநர் குற்றம் சாட்டு கிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் தலைமைச் செயலகத்தி லும், ஆன்லைனிலும் நடைபெற்றது. பல்கலைக்கழகங்களில் தான் கூட்டம் நடத்த வேண்டும் என கூறும் ஆளுநர், ஏன் ஆளுநர் மாளிகையில் கூட்டம் நடத்துகிறார்?. அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை வேண்டுமென்றே சொல்கிறார். ஒவ்வொரு துறையிலும் ஆளுநர் அரசியல் செய்து வருகிறார். பல்கலைக்கழக விவகாரங்களில் ஆளுநர் தலையிடுகிறார். நாகை மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆளுநர் மாளிகை யில் நடத்துவது சரியா?. பல்கலைக் கழகத்தில் நடத்த வேண்டிய கூட்டத்தை ஆளுநர் மாளிகையில் நடத்துவது ஏன்?. எல்லா துறையிலும் தாம் தான் எல்லாம் என ஆளுநர் நினைத்து வரு கிறார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசையே மதிக்காமல் ஆளுநர் செயல்படுகிறார். அவரது அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது. ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணா மலையே கூறிவிட்டார். எங்களிடம் ஏதாவது கூற நினைத்தால் நேரடியாக கூறலாம். ஆனால் ஏன் பத்திரிகை களுக்கு அறிக்கை கொடுக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.