states

சட்டமன்ற கேள்வி நேரத்திலிருந்து... ஜிஎஸ்டி வரியால் நலிவடையும் காந்தி ஆசிரமங்கள்!

 ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி): திருச்செங்கோட்டில் கதர் துணி தயாரிக்கின்ற காந்தி ஆசிரமம் இருக்கிறது. 1925 ஆம் ஆண்டிலிருந்து அங்கு கதர் துணி தயாரிக்கிறார்கள். மூதறி ஞர் ராஜாஜி 9 ஆண்டுகள் திருச்செங்கோடு  காந்தி ஆசிரமத்தில் தங்கியிருந் திருக்கிறார். காந்தியடிகள் 2 முறை அங்கே வந்திருக்கிறார். 26 ஏக்கர் நிலம்  அந்த ஆசிரமத்தில் இருக்கிறது. அங்கு  கதர் துணியை தயாரிக்கும் பணிகளை  செய்ய வேண்டும். தயாரிப்பதில் பிரச்சினை இல்லை. அதை சந்தைப்படுத்து வதில் மிகவும் தடுமாறுகிறார்கள். அதேபோல், காந்தி ஆசிரமத்தில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி போடப்படுகிறது. இதனால், காந்தி ஆசிரமங்கள் அனைத்தும் வளர்ச்சி இல்லாமல் இன்றைக்கு மிகவும் நலிவடைந்த சூழலில் இருக்கின்றன. எனவே அங்கு தயாரிக்கப்படுகிற கதர் துணியை அரசே கொள்முதல் செய்தால் மறுபடியும் பிரகாசமாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.  அமைச்சர் காந்தி: கதர் வாரியம் திமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டபோது, கிட்டத்தட்ட 4 ஆயிரம் பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். கடந்த 10 ஆண்டு காலத்தில் அந்த எண்ணிக்கை 400-ஆக குறைந்துவிட்டது. எனவே உறுப்பினரின் கோரிக்கை நிச்சயமாக நிறை வேற்றப்படும்.