states

img

தலித் மக்களுக்கு இலவச வீட்டு மனை: எதிர்ப்பு தெரிவித்து மாற்று சமூகத்தினர் அராஜகம்

திருத்தணி, ஜூன் 25- திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை அடுத்த ராஜாநகரம் கிராமத்தில் வசித்து வரும் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த 100 குடும்பங்களுக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு இலவச வீட்டு மனைகளை வழங்கி யுள்ளது. இருப்பினும் இதற்கு மற்றொரு தரப்பி னர் எதிர்ப்பு தெரி வித்து வருவதால் பல ஆண்டுகளாக பயனாளி களுக்கு இடத்தை அளவீடு  செய்துதரமால் இழுத் தடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இலவச வீட்டு மனைகளை பெற்ற பயனாளிகள் மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்திருந்தனர். இந்த புகாரை விசாரணை செய்த ஆணையம், பயனாளி களுக்கு இலவச வீட்டு மனைகளை சர்வே செய்து வழங்க உத்தரவிட்டது. அதன்பேரில் சில தினங்க ளுக்கு முன்பு திருத்தணி கோட்டாட்சியர் சத்யா தலைமையில் வரு வாய்த்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் வீட்டு மனைகளை சர்வே செய்து பயனாளிகளிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஜூன் 24) திடீரென்று ஒன்று திரண்ட மாற்று சமூகத்தை சார்ந்தவர்கள், அரசு அதிகாரிகள் நட்டு சென்ற கற்களை பிடுங்கி வீசினர். இச்சம்பவம் குறித்து தலித் மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், கவி கண்ணன், விநாயகம், ஜெயராமன் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த மாற்று சமூ கத்தை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உட்பட பள்ளிப்பட்டு-சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் சாலையோரங்களில் இருந்த மரங்களை வெட்டி சாய்த்தனர்.

இதனையறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆர்.கே. பேட்டை வட்டாட்சி யர் தமயந்தியை சிறைபிடித்தனர். போராட்டக் காரர்கள் பிடியில் சிக்கி 3 மணி நேரமாக அவதிப்பட்ட வட்டாட்சியர் திடீரென்று மயக்கமடைந்தார். பெரும் போராட்டத்திற்கு பிறகு, அந்த கும்பலிடம் இருந்து வட்டாட்சியரை காவல்  துறையினர் மீட்டனர். பல மணி நேரமாக நீடித்த போராட்டம் விடிய விடிய தொடர்ந்தது. நள்ளிரவில் மின்சாரத்தை துண்டித்த போராட்ட கும்பல், பாது காப்பு பணியில் ஈடுபட்டி ருந்த காவலர்கள் மீது திடீ ரென்று கல்வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர்.  இதனால் அந்த பகுதி கலவர பூமியானது. அதன்பிறகு, காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்ய பிரியா, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கல்யாண் ஆகியோர் தலைமையில் கூடுதலாக காவலர்கள் வரவழிக்கப்பட்டனர். மேலும் சிறப்பு காவல் பிரிவும் சம்பவ இடத்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.