states

அக்னிபாதைக்கு 7.5 லட்சம் பேர் விண்ணப்பம் பெருமையல்ல; வேலையில்லாக் கொடுமை!

புதுதில்லி, ஜூலை 8 - இந்திய ராணுவத்திற்கு 17.5 முதல் 23 வயது வரையுள்ள இளைஞர்களை 4 ஆண்டுகளுக்கு மட் டும் காண்ட்ராக்ட் அடிப்படையில் பணிநியமனம் செய்யும் புதிய திட்டத்தை ‘அக்னிபாதை’ என்ற பெய ரில் மோடி அரசு கொண்டு வந்துள்ளது.  இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள சூழலிலும், இளைஞர்கள் ரயில் எரிப்பு, பேருந்து எரிப்பு என பல்வேறு போராட்டங்களையும் நடத்தி யும், இந்த திட்டத்தை அமல்படுத்தியே தீருவேன் என்று மோடி அரசு பிடிவாதமாக உள்ளது. ‘அக்னி பாதை’ திட்டத்தின்கீழ் விமானப்படையில் சேர careerindianairforce.cdac.in என்ற அதிகாரப் பூர்வ இணையதளத்தில் ஜூன் 24 முதல் ஜூலை  5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறி விப்பாணையும் வெளியிட்டது. இதனடிப்படையில், அக்னிபாத் திட்டத்தின் கீழ்  இந்திய விமானப் படையில் சேருவதற்கு 7 லட்சத்து 49 ஆயிரத்து 899 பேர் தற்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அளித்துள்ளனர்.

இதுவரை விமானப் படை பணி நியமனத்திற்கு பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் இதுவே அதிகம் என்பதால், இது ‘அக்னிபாதை’ திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பையும், ஆர்வத்தையுமே காட்டுகிறது என்று மோடி அரசு பெருமையடித்து வருகிறது. இந்நிலையில், ‘அக்னிபாதை’ திட்டம் காண்ட்ராக்ட் அடிப்படையிலானது என்றாலும் அதில் சேருவதற்கு 7.5 லட்சம் இளைஞர்கள் விண்ணப் பிக்கிறார்கள் என்றால், “இது பெருமைப்படக் கூடிய விஷயம் அல்ல. நாட்டின் வேலைவாய்ப்பின்மை மிக மோசமான உச்ச நிலையில் இருக்கிறது என்பதையே வெளிப்படுத்தக் கூடியதாகும்” என்று ஒன்றிய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் தமது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.