states

ஜி.டி.பி. வளர்ச்சி யார் கைகளுக்கு போனது?

“எங்களுக்கு வளர்ச்சி எனில் ஏழைகளில் ஏழைகளை முன் னேற்றுவதுதான்! வளர்ச்சி எனில் பழங் குடி மக்கள்/ தலித் மக்கள்/ பிற்படுத்தப் பட்ட மற்றும் பொருளாதார நன்மைகள் மறுக்கப்பட்டவர்களின் வளர்ச்சிதான்!” -இது 2024 மார்ச்சில் பிரதமர் சுட்ட வடை! 2011-12 மற்றும் 2022-23 ஆண்டுகளுக் கிடையே ஜி.டி.பி. வளர்ச்சி 60%. ஆனால் 34% குடும்பங்கள் தேசிய குறைந்த பட்ச ஊதியத்தைவிட குறைவாக பெறு கின்றனர். விளைவு? தேசிய வருமானத்தில் உயர்மட்ட 1% பேர் 22%ஐ வளைத்து கொண்டுள்ளனர்.  உயர்மட்ட 10% பேர் 60% - ஐ வளைத்து கொண்டுள்ளனர். அடிமட்டத்தில் உள்ள 50% உழைப்பாளிகள் வெறும் 12.7%தான் பெறுகின்றனர்.  தேசிய செல்வத்தில் உயர்மட்ட 10% பேர் 64.5% ஐ அபகரித்துள்ளனர். அடிமட்ட 50% ஏழைகளோ வெறும் 5.6% தான் பெற்றுள்ளனர். இது பொருளாதார அசமத்துவத் தின் மிக கோரமான வடிவம். பா.ஜ.க. ஆட்சியில் அசமத்துவம் வரலாறு  காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. உலகிலேயே மிக மோசமான பொரு ளாதார அசமத்துவ தேசமாக இந்தியா உருவெடுத்துள்ளது. பணக்காரர்கள் மெகா பணக்காரர்களாக ஆனார்கள். ஏழைகள் பரம ஏழைகளாகவும் ஓட்டாண்டி களாகவும் மாறினர்.  பொருளாதார அசமத்துவத்தை திணித்த  பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவோம்!  ஏழைகளின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுத்துவோம்!!