states

மீன்வள வங்கியை செயல்படுத்த வேண்டும்

சென்னை, மார்ச் 1- மீன்வள வங்கியை செயல்படுத்த துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மீன்பிடி தொழிற் சங்க கூட்டமைப்பு (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் எம்.கருணாமூர்த்தி, பொதுச் செயலாளர் எஸ்.அந்தோணி, பொருளாளர் எஸ்.ஜெயசங்க ரன் ஆகியோர் மீனவர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையா ளரை புதனன்று (மார்ச் 1) சந்தித்து மனு அளித்தனர்.  அந்த மனுவில், மீனவர்களின் பங்களிப்புடன் கூடிய தேசிய மீனவர் சேமிப்பு நிவாரண திட்டம் மற்றும் விபத்து காப்புறுதி திட்டங்கள் 70 வயது வரை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மீன்வள வங்கியை செயல்படுத்த துரித  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்க ளுக்கு சென்று மீன்களை விற்பனைக்கு எடுத்துவர ஐஸ் பெட்டியுடன் கூடிய அதிக இழுவை திறன் கொண்ட (150 சிசி. 180 சிசி. 220 சிசி) இருசக்கர வாகனங்கள் மானிய விலையில் வழங்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் துறை முகங்களுக்கு தனியாகவும், உள்நாட்டு மீனவர்களுக்கு தனியாகவும் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகங்கள் அமைக்க வேண்டும். மீன்பிடிக் கலன்கள், விசைப்படகு, கட்டுமரம், வள்ளம் உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித் தல் ஆகியவற்றை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ப தையே நடைமுறைப்படுத்த வேண்டும், பி, சி1, சி2 மற்றும் டி பிரிவுகளில் மீன்பிடிக் கலன்கள் வைத்துள்ள அனைத்து மீனவர்களுக்கும் மானிய விலை மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது கூட்டமைப்பின் மாநில தலைவர் ஜி.செலஸ்டின், சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலா ளர் லெனின் சுந்தர், கூட்டமைப்பின் தென்சென்னை மாவட்டப் பொருளாளர் எஸ்.பரமசிவன் உள்ளிட்ட நிர்வாகி கள் உடனிருந்தனர்.