சென்னை, நவ.10- சிஐடியு போராட்டம் காரணமாக சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் முதன்முறையாக போனஸ் பெற உள்ளனர். 1978ஆம் ஆண்டு சென்னை பெரு நகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் உருவாக்கப்பட்டது. இங்கு சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தொழிலாளர் சங்கம் (சிஐடியு) செயல்பட்டு வருகிறது. சிஐடியுவின் தொடர் போராட்டம், வழக்குகளைத் தொடர்ந்து 258 என்எம்ஆர் தொழிலா ளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்ட னர். இதன் தொடர்ச்சியாக, 480 நாட்கள் பணி முடித்தவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சில்ட், ஜெட்ராடு ஓட்டுநர்கள், களப்பணியாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் தீபாவளி போனஸ் வழங்க கோரி வேலை நிறுத்த அறி விப்பு செய்தது. இதனையடுத்து, தொழிலாளர் உதவி ஆணையர் க.பா.சாந்தி முன்னி லையில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. நிர்வாகம் சார்பில் தொழில் தொடர்பு மேலாளர் வெங்கடேசனும், சிஐடியு சார்பில் சங்கத்தின் தலைவர் க.பீம்ராவ், பொதுச்செயலாளர் எம். பழனி, துணைத் தலைவர் சி.சத்யநாதன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
அரசின் பிற வாரியங்களில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிர்ணயித்துள் ளதை போன்று, குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்திலும் ஒப்பந்ததாரர் மூலம் போனஸ் வழங்க வேண்டும் என்று கோரினர். அதை நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. இதனையடுத்து ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்து நமது செய்தியாளரிடம் பேசிய சங்கத்தின் தலைவர் க.பீம்ராவ், “சிஐடியு மேற்கொண்ட தொடர் போராட்டத்தின் காரணமாக, குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய வரலாற்றில் முதன் முறையாக ஒப் பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் வியாழனன்று (நவ.9) கையெழுத்தானது. இதன்படி சில்ட், ஜெட்ராட் ஓட்டுநர்கள், களப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து வகை கான்ட்ராக்ட் பணி செய்யும் 2 ஆயிரத்து 850 தொழிலாளர்கள் பயன டைவார்கள். ஒப்பந்தம் ஏற்பட்டதை யடுத்து வேலை நிறுத்த அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது” என்றார்.