சென்னை, ஜூன் 5- ஒன்றிய அரசு பணியாளர் தேர்வு ஆணை யம் நடத்தும் குடிமைப் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு ஞாயிறன்று (ஜூன் 5) தமிழ கம் முழுவதும் நடைபெற்றது. இதில் சென்னையில் மட்டும் 25 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அரசு பணியாளர் தேர்வு ஆணையம் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 20 குடிமைப் பணிகளுக்கான தேர்வை நடத்துகிறது. இதன்படி இந்தாண்டிற்கான முதல் நிலைத் தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது. காலை, மதியம் என இரு வேளைகளில் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 77 நகரங்க ளில் இந்த தேர்வு நடைபெற்றது. காலை 9.30 முதல் 11.30 மற்றும் மதியம் 2.30 முதல் 4.30 என்று இரு வேளைகளில் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த தேர்வு நடந்தது. இதில் சென்னையில் 68 மையங்களில் 25 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். தேர்வு எழுதும் மாணவர்கள் கருப்பு பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே ஓஎம்ஆர் தாளில் பயன்படுத்தவேண்டும். சாதாரண கைக்கடிகாரங்களைப் பயன்படுத்தலாம். மொபைல் போன்கள், பென்டிரைவ், ஸ்மார்ட் வாட்ச், புளூ டூத் உள்ளிட்ட மின்னணு சாத னங்களுக்கு தேர்வு வளாகத்தில் தடை விதிக் கப்பட்டிருந்தது.