சென்னை, ஆக.25- தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2003ஐ நடைமுறைப்படுத்தாமல் நிறுத்தி வைக்கவேண்டும் என்று மாநில அரசை விவசாயிகள் சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் மாநில பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை வருமாறு; தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த கூட்டத்தொடரின் இறுதி நாளில் 17 சட்ட மசோதாக்களை கொண்டு வந்து சட்டமன்றத்தில் எவ்வித விவாதம் இல்லாமல் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது. இதில் மிக முக்கியமான சட்டம், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023. இந்த சட்டத்தின் மூலம் அரசு அறிவிக்கும் சிறப்பு திட்டங்களுக்கு 100 ஹெக்டேர் வரை உள்ள நிலங்களில் உள்ள நீர்நிலைகள், நீர்வழிப்பாதைகள் உட்பட தனியாரிடம் கொடுப்பதற்கு இச்சட்டம் வழிவகை செய்கிறது. நிலம் கையகப்படுத்துவதற்கு ஏற்கெனவே பல சட்டங்கள் உள்ள நிலை யில், அந்த சட்டங்களில் குறிப்பிட்டுள்ள படி, புதிய திட்டங்களுக்கு விவசாயி களிடம் நிலத்தை கையகப்படுத்தும் போது நியாயமான சட்டப்படியான இழப்பீட்டை பெறுவதற்கே விவசாயிகள் போராடித்தான் பெற வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள புதிய நில ஒருங்கிணைப்பு சட்டம் எந்த வகையிலும் ஏழை சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் உயிர்நாடியாக உள்ள நிலங்களை பாதுகாப்பதற்கும், தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்திட வும் உதவாது.மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் நீர்நிலைகளை தனி யாருக்கு தாரை வார்க்கத்தான் இந்த சட்டம் பயன்படும். எனவே, மாநில அரசு இச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இரண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களும் கடந்த மே மாதம் 17 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம்.
இதுகுறித்து சென்னை யில் பல்வேறு அமைப்புகள் இணைந்து கருத்தரங்கம் நடை பெற்றது. இதில் நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களும் பங்கேற்று இச்சட்டத்தை மாநில அரசாங்கம் திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக் கையை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் துவக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கையெழுத்திட்டுள்ளனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 22 ஆம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்ட மும் சென்னையில் நடைபெற்றது. மேலும், பல்வேறு விவசாய அமைப்புகளும், பொதுநல அமைப்புகளும் இச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலை பெற்று ஆகஸ்ட் 17 அன்று மாநில அரசி தழில் வெளியிட்டிருப்பதை வன்மை யாக கண்டிக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளையும், நிலங்க ளையும் சிறப்பு திட்டம் என்ற பெயரில் பெரும் நிறுவனங்கள் கையில் ஒப்படைக்க உதவிடும் இந்த தமிழ்நாடு நிலஒருங்கிணைப்பு சட்டம் 2023ஐ நடைமுறைப்படுத்தாமல் நிறுத்தி வைக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசை வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.