சென்னை, மார்ச் 21- வேளாண் நிதிநிலை அறிக்கையில் பொதுவிநி யோகக் கடைகள் மூலம் கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பை வரவேற்றுள்ள தமிழ்நாடு விவசாயி கள் சங்கம், விவசாயிகளின் எதிர்பார்ப்புகளையும், ஆலோசனைகளையும் நிறைவேற்றும் விதமாக இல்லை என்று தெரிவித்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை மார்ச் 21 அன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது திமுக ஆட்சி யின் மூன்றாவது வேளாண் நிதி நிலை அறிக்கை யாகும். இந்நிதிநிலை அறிக்கையில், சிறுதானி யங்கள் உற்பத்தி, கொள்முதல், விற்பனை மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மாணவர் விடுதிகள், மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகங்களில் சிறுதானிய உணவு வழங் கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பொது விநியோகக் கடைகள் மூலம் கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் விற்பனை செய்யப் படும் என்று அறிவித்திருப்பதை தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் வரவேற்கிறது. பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியி னத்தைச் சேர்ந்த சிறு-குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்பதும், இயற்கை வேளாண்மையில் ஈடுபடு பவர்கள் மற்றும் ஊக்கப்படுத்தும் விவசாயிக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என்று அறி வித்திருப்பதும் வரவேற்கத்தக்கது. 1000 ஏக்கரில் முருங்கை சாகுபடி செய்யப்படுவதுடன் முருங்கை யை ஏற்றுமதி செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்று கூறியிருப்பதும், மதுரை மல்லிகைக்கான சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்தி தருவது, வனவிலங்குகளால் விவசாய பயிர்கள் அழிக்கப்படுவது, விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக விவசாய பிரதிநிதி கள் உட்பட கொண்ட குழு அமைக்கப்பட்டு அறிக்கையை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது ஆகும். அதே நேரத்தில், இந்த நிதிநிலை அறிக்கை விவசாயிகளின் எதிர்பார்ப்புகளையும், கருத்துக் கேட்பு கூட்டங்களில் தெரிவித்த ஆலோசனை களையும் நிறைவேற்றும் விதமாக இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
உற்பத்திச் செலவு அதிகரிப்பை கணக்கில் எடுக்கவில்லை
திமுக தேர்தல் வாக்குறுதியாக கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம், நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 வழங்கப்படும் என்று அறி வித்திருந்தது. இது குறித்து இந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடாதது பெரும் ஏமாற்றத்தை ஏற் படுத்தியுள்ளது. கரும்புக்கு டன் ஒன்றுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை ரூ.195, நெல்லுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட சன்ன ரகத்திற்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100, சாதாரண ரகத்திற்கு ரூ.75 என்று அறிவித்திருப்பது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. இடுபொருட்கள் விலை, உற்பத்திச்செலவு கடுமையாக அதிக ரித்துள்ள நிலையில், அது குறித்து கொஞ்சமும் கணக்கிலெடுத்து கொள்ளப்படாமல் இந்த அறி விப்பு வெளியிடப்பட்டுள்ளது.
‘அரசு பயிர்க்காப்பீட்டு நிறுவனம்’ அறிவிப்பு இல்லை
இயற்கை இடர்பாடுகளால் விவசாயப் பயிர்கள் பாதிக்கப்படும் போது விவசாயிகளுக்கு ஓரளவு பாதுகாப்பு வழங்கும் வகையில் பயிர்க்காப்பீட்டுத் திட்டம் இருந்தது. பாஜக ஆட்சியில், இத்திட்டத்தில் தனியார் கம்பெனிகள் ஈடுபட அனுமதித்ததால் கம்பெனிகளுக்கான காப்பீடாக மாறி கொள்ளை லாபமடித்துக் கொண்டிருக்கிறார்கள். வரும் ஆண்டில் பயிர்க்காப்பீட்டுக்காக தமிழ்நாடு அரசு 2337 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஆனால், பாதிக்கப்படும் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை கிடைப்பதில்லை என்பது தான் கடந்த கால அனுபவம். எனவே, தமிழ்நாடு அரசே பயிர்க்காப்பீட்டு நிறுவனம் ஒன்றை துவங்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர்ந்து வற்புறுத்தி வந்தது. ஆனால், தமிழ்நாடு அரசு இதை கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் பயிர்க்கடன்களுக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அது சிறு-குறு விவசாயி களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் வகையில் மாற்றப்பட வேண்டும். கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகளை சேமித்து வைக்க கிடங்குகள், அழுகும் பழங்கள், காய்கறிகள் போன்ற பொருட்களை சேமித்து வைக்க குளிர்பதன கிடங்குகள் போதுமான அளவில் அமைப்பது குறித்து எதுவும் குறிப்பிடா தது உற்பத்தி செய்த வேளாண் விளை பொருட்கள் அழியும் நிலை தொடரவே செய்யும்.
காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதை யொட்டி வேளாண் சார்ந்த தொழில்களை துவங்க சட்டத்தில் வற்புறுத்தப்பட்டுள்ளது. டெல்டா மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய வகையில், உடனடியாக அத்த கைய தொழில்கள் துவங்கப்பட வேண்டும். மாறாக, 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்று அறி வித்திருப்பது அம்மாவட்ட இளைஞர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம். வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச விலை தீர்மானித்து அரசே கொள்முதல் செய்து, நுகர்வோருக்கு நியாயமான நிலையில் கிடைக்கக் கூடிய வகையில் கேரள மாநில அரசு 16 வகையான பழங்கள், காய்கறிகள் கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறது. அதுபோன்ற கொள்முதல், விலை உத்தரவாதம் தரக்கூடிய வகையில் எந்தவொரு திட்டமும் அறிவிக்கப்பட வில்லை.
புதிய அறிவிப்புகளுடன் ஏமாற்றம் தரும் நிதிநிலை அறிக்கை
தூர்வாரும் பணிக்கு வெறும் 90 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியிருப்பது யானை பசிக்கு சோளப்பொரி போன்றதே! காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டம் விரைவாக நிறை வேற்றப்படுவதற்கு நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படாததும், புதிய பாசன திட்டங்கள் குறித்த எந்த அறிவிப்பும் இல்லாதது பெரும் ஏமாற்றமே. விவசாயத்திற்கு கடந்த ஆண்டு 1.5 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டதாக அரசு அறிவித்தாலும் போதுமான மின்சாதனங்கள் இல்லாததால் அந்தப் பணி முழுமையடைய வில்லை. வரும் ஆண்டில் எவ்வளவு விவசாயி களுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை. மொத்தத்தில், ஒரு சில புதிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருந்தாலும், விவ சாயிகளுக்கு ஏமாற்றம் தரும் நிதிநிலை அறிக்கை யாகவே உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.