2 மாதம் ஆகியும் 29 சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை
பாலசோர், ஆக. 2 - ஒடிசா மாநிலம் பால சோர் அருகே கடந்த ஜூன் மாதம் 2 அன்று 3 ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 295 பேர் பலியாகினர். 1,200-க்கும் மேற்பட்டோர் படு காயம் அடைந்த நிலையில், விபத்து குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விபத்து நடந்து 2 மாத காலம் ஆகியும் இன்னும் 29 சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை. இத னால் சடலங்களின் மரபணு மாதிரிகள் தில்லியில் உள்ள மத்திய ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தில்லி மசோதாவை ஆதரிப்பதா?
புதுதில்லி, ஆக. 2 - ஒடிஷா முதல்வரின் கட்சியான பிஜீ ஜனதா தளம், ஆந்திர முதல்வரின் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிய பாஜக அரசின் தில்லி சேவைகள் மசோதாவிற்கு ஆதரவு தருவதாக அறி வித்துள்ளன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆம் ஆத்மி எம்பி ராகவ் சாதா,”தில்லி சேவைகள் மசோதாவை ஆதரிப்ப வர்கள் வரலாற்றில் “தேச விரோதிகளாக” நினைவு கூரப்படுவார்கள். மசோதா வை ஆதரிப்பதற்கு ஏதாவது கட்டாயம் இருந்திருக்க வேண்டும்” என்று அவர் கூறி யுள்ளார். இதனிடையே சந்திரபாபு நாயுடுவின் தெலு ங்கு தேசம் கட்சியும் தில்லி சேவைகள் மசோதாவிற்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
செந்தில் பாலாஜி வழக்கில் விசார ணை முடிந்து தீர்ப்பை உச்சநீதி மன்றம் ஒத்திவைத்தது. இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறை கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. அமைச் சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1 கோடி பனை விதைகள் நடும் திட்டம்: செப்.24-ல் துவக்கம்
பனை விதைகள் நடும் பணியை செப்டம்பர் 24 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். பனை மரங்களை வெட்ட தடை விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. சட்டம் அமல்படுத்தப்படும்போது தடுக்கப் படும். பனை மரம் ஏறுவதற்கான நவீன இயந்திரங்களை கண்டுபிடிப்ப வர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பனை மரத் தொழிலாளர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளதாக தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் கூறியுள்ளார்.
கிரேன் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம்: முதல்வர் உத்தரவு
மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் விரைவுச்சாலை திட்டத்துக்கான பாலம் கட்டுமானப் பணியின் போது ராட்சத கிரேன் கவிழ்த்து ஏற்பட்ட விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். இதில் கிருஷ்ண கிரி மாவட்டம், போகனப்பள்ளி ஊராட்சி, விஐபி நகரைச் சேர்ந்த சந்தோஷ் (36), நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் ஆயக் காரன்புலத்தைச் சேர்ந்த கண்ணன் (78) ஆகிய 2 தமிழர்களும் உயிரிழந்த னர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தனியார் வாகன இணைப்பு சேவையைத் தொடங்கிய மெட்ரோ நிறுவனம்
பயணிகள் வசதிக்காகச் சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம், போரூர் இடையே தனியார் வாகன இணைப்பு சேவையைத் சென்னை மெட்ரோ ரயில் தொடங்கியுள்ளது. ஃபாஸ்ட் டிராக் மொபைல் ஆப் மூலம் பயணிகள் இந்த வசதியை பயன் படுத்திக் கொள்ளலாம் எனவும் ஒரு நபருக்கு ஒரு பயணத்திற்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேடசந்தூரில் அமலாக்கத்துறை சோதனை
திண்டுக்கல், ஆக.2- பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஒன்றிய பாஜக அரசு அமலாக்கத்துறை சோதனையை தீவி ரப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மிரட்டி அவர்களை பாஜகவுக்கு கொண்டுவரும் வேலையை செய்துவரு கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி யுள்ளனர். இந்நிலையில் ஆகஸ்ட் 2 புதனன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளராக இருப்பவர் வீரா.சாமிநாதன். வெளிமாநிலங்களில் பைனான்ஸ் தொழில் மற்றும் பழனியில் தனியாக சிபிஎஸ்இ பள்ளியும் நடத்தி வரு கிறார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் என்று சந்தேகப்பட்ட இவரது வீட்டில் புதனன்று அம லாக்கத் துறையினர் சோதனையிட்டனர். வேடசந்தூர் ஆத்துமேடு கொங்கு நகரில் உள்ள அவரது வீட்டிலும் தமுத்துப்பட்டியில் அவரது தோட்டத்து பங்களாவிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
20 அதிநவீன டயாலிசிஸ் இயந்திரங்கள்
சென்னை,ஆக.2- சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு உயர் சிறப்பு மருத்துவ மனையில் ரூ.1 கோடியில் அதிநவீன டயாலிசிஸ் இயந்திரங்கள் நிறுவப் பட்டுள்ளன. அதேபோன்று மூளை நரம்பியல் மருத்துவ சிகிச்சை பிரிவில் ரூ.75 லட்சம் செலவில் அதிநவீன மூளை நரம்பு மின்காந்த சிகிச்சை இயந்திரமும், மருத்துவமனை வளாகத்தில் ரூ.25 லட்சம் செலவில் 4 ஆயிரம் லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து மூளைச்சாவு அடைந்த நபரிடம் இருந்து உறுப்பு தானம் பெறுவது தொடர்பான கருத் தரங்கை அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் சாந்தி மலர், சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் தேரணிராஜன், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப் பினர் செயலாளர் கோபாலகிருஷ்ணன், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் பார்த்த சாரதி, சிறப்பு அலுவலர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ரூ.1600 கோடி முதலீடு; 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அமைச்சர் உறுதி
ராணிப்பேட்டை, ஆக. 2- ராணிப்பேட்டை மாவட்டம், பாரதி நகரில் உள்ள தனியார் விடுதி யில் தோல் தொழிற்சாலை உரிமை யாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் டி ஆர்.பி. ராஜா கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, “தமிழ் நாட்டில் தொழில்துறை முதலீடுகள் குறித்து பாஜக பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது”என்றார். தமிழ்நாட்டில் ஹோன்-ஹாய் நிறுவனத்தின் சார்பில் ரூ. 1600 கோடி யில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் புதிய தொழிற்சாலை ஏற்படுத்தி அதன் மூலம் 6 ஆயிரம் ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு நிச்சயம் உருவாக்கப்படும் என்றும் இதில் பாகிஸ்தான் நாடு மற்றும் ஹோனோவின் சேர்மன் யங்க் லியோ தொழில் துவங்க ஆர்வம் காட்டி வருகிறார் என்றும் அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வளர்மதி, ஆற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல் ஈஸ்வரப் பன், தொழில்துறை நிறுவனத்தின் தொழிலதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பெள்ளிக்கு அரசு வேலை
சென்னை, ஆக.2- நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் தற்காலிக பராமரிப்பாளராக பணியாற்றி வரும் பெள்ளிக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். தலைமைச் செயலகத்தில், வனத் துறை சார்பில் புதனன்று (ஆக.2) நடந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் தற்காலிக யானை பரா மரிப்பாளராக பணியாற்றி வந்த பெள்ளிக்கு, முதல் பெண் காவடி யாக (யானை பராமரிப்பாளர்) நியமிக் கப்பட்டதற்கான பணி நியமன ஆணையை வழங்கினார் முதலமைச் சர் வழங்கினார்.
பழனி கோவில் விவகாரத்தில் மேல்முறையீடு: அமைச்சர்
சென்னை,ஆக.2- சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் அமைச்சர் பி.கே. சேகர் பாபு தலைமையில் மாதாந்திர சீராய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது, “அனைத்து சாதியினரும் அர்ச்சகராக லாம் என்ற திட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட அர்ச்சகர் கள் நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடை பெற்றது”என்றார். நாள் முழுவதும் அன்ன தானம் வழங்கும் திட்டத்தை 15 ஆம் தேதிக்குள் மேலும் 5 கோயில்களில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். இந்து சமய அறநிலை யத்துறை சார்பில் ரூ.4,995 கோடி மதிப்பிலான 5,433 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ள தாக சேகர்பாபு தெரி வித்தார். 866 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட் டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் இந்த ஆண்டின் இறுதிக்குள் 7,500 திருக் கோயில்களுக்கு திருப் பணிக்காக ரூ.150 கோடி வழங்கப்படும் என்றும் கூறினார்.
உலகச் செய்திகள்
கானும் புயல் காரணமாக ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் 2 லட்சம் வீடுகளுக்கு மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மின்னிணைப்பு பெறும் குடுமபங்களில் 34 விழுக்காடாகும். இரண்டாவது நாளாக ஒகினாவா மாகாணத்தின் தலைநகர் நஹாவில் இருந்து பயணம் மேற்கொள்ள வேண்டிய 400 விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.
டொமினிகன் குடியரசில் பணியாற்றும் மருத்து வர்கள் 48 மணிநேர வேலை நிறுத்தத்திற்கான முன்னறிவிப்பை வெளியிட்டுள் ளார்கள். ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்தாமல் 11 மாதங்கள் கடந்து விட்டதை மருத்துவர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆகஸ்டு 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம் நடைபெறப் போகிறது.
34 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதங்களை தைவானுக்கு அனுப்பப் போவதாக கடந்த வாரத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையிலிருந்து அறிவிப்பு வெளியானது. இந்த ஆயுத விற்பனை இந்தப் பிராந்தியத்தின் அமைதி மற்றும் நிலைத்தன்மையைக் குலைக்கக்கூடியது என்று தேசியப் பாதுகாப்புக்கான சீன அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டான் கெபெய் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் தற்போது நடைமுறையில் உள்ள விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் முக்கிய கட்சிகளில் ஒன்றான நேபாள காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. அண்மையில் அக்கட்சியின் தேசிய செயற்குழு நடைபெற்றது. அக்கூட்டத்தில் இக்கருத்து தெரிவிக்கப்பட்டாலும் தீர்மானம் எதையும் அவர்கள் நிறைவேற்றவில்லை.
ஸ்காட்லாந்து நாடாளுமன்றக் கட்டிடத்தின் சுவர்களை சிவப்பு வண்ணத்திற்கு மாற்றும் போராட்டத்தை சுற்றுச்சூழல் அமைப்புகள் நடத்தியுள்ளன. புதிதாக எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான உரிமங்களை பிரிட்டன் அரசு வழங்கும்போது, அவற்றை எதிர்ப்பதற்கான முதுகெலும்பு அவசியம் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
இந்தியா, ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அரிசி ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகளை விதித்திருப்பதால் வியட்நாமுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன என்று அந்நாட்டின் வேளாண்மைத்துறை துணையமைச்சர் ஃபுங் டிக் டியென் தெரிவித்துள்ளார். இதை எட்ட எந்தெந்தத் துறைகளுக்கு என்னென்ன கடமைகள் என்பதை ஆய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.