செப்.5-இல் வங்கதேச பிரதமர் வருகிறார்
புதுதில்லி, செப். 2 - வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா செப்டம்பா் 5 முதல் 8-ஆம் தேதி வரை இந்தியா வில் சுற்றுப் பயணம் மேற் கொள்கிறார். “வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது இந்தியப் பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி யைச் சந்தித்து முக்கியப் பேச்சுவாா்த்தைகளை மேற் கொள்கிறார். குடியரசுத் தலைவா் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலை வா் ஜகதீப் தன்கர் ஆகி யோரையும் அவர் சந்திக் கிறாா்” என்று இந்திய வெளி யுறவு அமைச்சகம் தெரி வித்துள்ளது.
அந்தமான், நிக்கோபாரில் நிலநடுக்கம்
போர்ட்பிளேர், செப். 2- வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் தீவுகளில் வெள்ளியன்று மதியம் 12.43 மணியளவில் நில நடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தமானின் போர்ட் பிளேர் நகர் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகி யுள்ளதாகத் தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் போர்ட் பிளேயருக்கு 108 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்ட தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருண் காந்தி கேள்வி
லக்னோ, செப். 2- “இளைஞர்களிடையே வேலைவாய்ப்பு விகிதம் 20.9 சதவிகிதத்தில் இருந்து 10.4 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சிஆகும். பிரதமர் மோடி 10 லட்சம் காலியிடங்களை நிரப்புமாறு அரசுத் துறைகளை கேட்டுக்கொண்டார். ஆனால் எந்த துறை யாலும் திடமான திட்டத்தை வகுக்க முடியவில்லை. இன்னும் எவ்வளவு காலத்துக்கு இளைஞர்கள் காத்திருப்பார்கள்?”
பரிவாரங்களின் கூட்டத்தைக் கூட்டும் ஆர்எஸ்எஸ்!
“ஆர்எஸ்எஸ் தனது 36 பரிவார அமைப்புகளின் வருடாந்திர அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டத்தை, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் கூட்டவுள்ளது. செப்டம்பர் 10 முதல் 12-ஆம் தேதிவரை நடைபெறும் இக்கூட்டத்தில், விஎச்பி, ஏபிவிபி, பிகேஎஸ், பிஎம்எஸ், வித்யா பாரதி, பாஜக உள்ளிட்ட 36 சங்கப் பரிவாரங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இத்தகவலை நாக்பூர் ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் சுனில் அம்பேத்கர் தெரிவித்துள்ளார்.
மோடி பிறந்த நாளில் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ விழா?
செப்டம்பர் 17- பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் வருகிறது. இந்நிலையில், மோடியின் பிறந்த நாளை நாடு முழுவதும் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ திருவிழா என்ற பெயரில் கொண்டாட பாஜக-வினர் முடிவு செய்துள்ளனர். செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை, ஒரு மாநில பாஜக நிர்வாகிகள் வேறு மாநிலத்தின் மொழி மற்றும் கலாச்சாரத்தை பின்பற்றுவார்கள் என பாஜக கட்சித்தலைமை அறிவித்து உள்ளது.
100 நாள் வேலைக்கு ரூ. 5லட்சம் கோடி செலவு?
“ஒன்றிய அரசு கடந்த 8 ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு 5 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. அதில், 20 சதவிகிதம் கொரோனா காலத்தில் செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தெலுங்கானாவிற்கு ரூ. 20 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி சம்பவம்: மேலும் ஒருவர் கைது
கள்ளக்குறிச்சி,செப்.2- கனியாமூர் தனியார் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத் திற்கு நீதி கேட்டு நடைபெற்ற கலவரத்தில் ஈடுபட்டோரை சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டும், வீடியோ ஆதாரங்களைக் கொண்டும் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில், சேலம் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்த சிவா (எ) வினோத் வீடியோ ஆதாரங்கள் மூலம் கைது செய்யப் பட்டார். இவர் கலவரத்தின் போது பள்ளி வளாகத்தில் இருந்த பேருந்தை இயக்கிய அங்கிருந்த மற்றொரு பேருந்து மீது மோதி சேதப் படுத்தியவர்.இவரை கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) முகமது அலி முன்பு ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். கனியாமூர் கலவரம் தொடர்பாக இதுவரை 367 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை,செப்.2- வட தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக செப்.4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலு டன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், மதுரை மற்றும் திருச்சி ராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்.6 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை திருப்பூர், தேனி, திண்டுக் கல், ஈரோடு, கிருஷ்ணகிரி தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், தென்காசி, மதுரை, திருச்சிராப்பள்ளி, வேலூர், ராணிப்பேட்டை, திரு வண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
முனைவர் பரசுராமன் மறைவு: முதல்வர் இரங்கல்
சென்னை, செப்.2- இந்தியாவின் பெருமைமிகு கல்வி நிறுவனமான டாடா சமூக அறிவியல் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் 14 ஆண்டுகள் பணியாற்றிய முனைவர் பரசுராமன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டரில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கோவில்பட்டியில் எளிய குடும்பத்தில் பிறந்த பரசுராமன் மிகுந்த சமூக ஈடுபாடு கொண்டவர் என்றும் அவரது மறைவால் வேதனையடைந்துள்ள குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.