states

பட்டியல் இனத்தவர் மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல்

ஈரோடு, நவ.28- கோபி அருகே பட்டியலினத்தவர் மீதான சாதி ஆதிக்கவாதிகளின் தாக்கு தலுக்கு, மார்க்சிஸ்ட் கட்சி,  தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரி வித்துள்ளது. மேலும், மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றுவரும் இளைஞர் களை நேரில் சந்தித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கட்சி யின் தலைவர்கள் ஆறுதல் தெரிவித்த னர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே பொலவக்காளி பாளையம், இந்திரா நகரைச் சேர்ந்த வர்கள் நவீன்குமார் மற்றும் அவரது நண்பர் கிருபாகரன். இருவரையும் சாதி ஆதிக்கவாதிகள் இருசக்கர வாக னத்தை பறித்து கொலை வெறி தாக்கு தல் நடத்தியும், முகத்தில் சிறுநீர் கழித்த செயல் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள் ளாக்கியது. இதில், ஒருவரது இடது கை முறிந்துள்ளது.  மாவட்ட ஆட்சியரும், காவல் கண் காணிப்பாளரும் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி தவறு செய்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். மேலும் இதனை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மாற்றி சாலை மறியல், காவல் நிலைய முற்றுகை நடத்தும் சாதி ஆதிக்கவாதி கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியல் இனத்த வர்கள் மீதான வன்கொடுமை சட்டப் படி வழக்கு பதிவு செய்யப்படுவதைத் தடுக்க நாடகம் அரங்கேற்றப்பட்டுள் ளது என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஈரோடு மாவட்ட தலை வர் பி.பி.பழனிசாமி மற்றும் மாவட்ட செயலாளர் மா.அண்ணாதுரை ஆகி யோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  முன்னதாக, தாக்குதலுக்குள்ளாகி கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாவட்டச் செயலாளர் மா. அண்ணாதுரை தலைமையில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.கோமதி, கோபி தாலுகா செயலாளர் ஜி.ஏ.துரை சாமி மற்றும் ததீஒமு கோபி தாலுகா பொருளாளர் மாரிமுத்து ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.