states

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு: 11 லட்சம் பேர் பங்கேற்பு

சென்னை, மே 21- தமிழ்நாட்டில் நடைபெற்ற குரூப் 2 தேர்வை 11 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தில் குரூப் 2, குரூப் 2 ஏ பதவிகளில் காலியாக உள்ள 5,000 பதவியிடங்களுக்கான தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 11 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர். இதில் ஆண்கள் 4.96 லட்சம் பேர். பெண்கள் 6.81 லட்சம் பேர். திருநங்கைகள் 48 பேர். மாற்றுத்திறனாளிகள் 14,000 பேர். பொது ஆங்கிலம் பிரிவில் 2.31 லட்சம் பேரும், பொதுத் தமிழ் பிரிவில் 9.46 லட்சம் பேரும் தேர்வு எழுதினர். 14,012 தலைமை கண்காணிப்பாளர்கள், 58,900 தேர்வு கூட கண்காணிப்பாளர்கள், 993 நடமாடும் குழுக்கள், 323 பறக்கும் படைகள், 6,400 கண்காணிப்பு குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னையில் 7 மையங்களில் 1.15 லட்சம் பேர் தேர்வு எழுதினர். அடுத்த படியாக மதுரையில் 64 ஆயிரம் பேர்,  சேலத்தில் 63 ஆயிரம், திருச்சியில் 50  ஆயிரம், கோவையில் 48 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். ஜூன் மாதம்  இறுதியில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.