states

10-ஆம் வகுப்பு தேர்வு தொடக்கம் “ஆப்சென்ட்” மாணவர்களை கண்டறிய மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு

சென்னை, ஏப்.3- தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்களன்று முடிவ டைந்தது. பிளஸ் 1 வகுப்புகளுக்கான தேர்வு செவ்வாயன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், இரண்டு தேர்வுகளிலும் 17 லட்சம் மாணவ-மாணவியர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். பிளஸ் 2 தேர்வு கடந்த 13-ஆம் தேதி தொடங்கிய  நாள் முதல்  இரண்டு தேர்வுகளுக்கு (மொழித்தாள்) சுமார் 50 ஆயிரம் மாணவ மாணவியர் தேர்வு எழுத வரவில்லை. இதற்கான காரணம் கண்டறிய முடியாத நிலை ஏற்பட்ட நிலையில், இடை நிற்றல் போன்ற காரணங்களால் மாணவ-மாணவியர் தேர்வு  எழுத வரவில்லையா? தேர்வில் ஆர்வம் இல்லையா? என்று  கண்டறிய பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தை கூட்ட வேண் டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது.  அதன்படி கடந்த 24-ஆம் தேதி அனைத்து பள்ளிகளி லும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டது. அப்  போதே பத்தாம் வகுப்பு தேர்வு எழுத பதிவு செய்துள்ள மாணவ-  மாணவியர் பற்றிய விவரங்களை பெற்றோர் மூலம் கேட்ட றியப்பட்டது. மேலும் தேர்வுக்கு பதிவு செய்திருந்தவர்களை கண்டிப்பாக தேர்வில் பங்கேற்க செய்ய வேண்டும் என்று பெற்றோரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. குறிப்பாக பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கு 25 ஆயிரம் மாணவ-மாண வியர் பங்கேற்கவில்லை என்பதால், செய்முறைத் தேர்வுக்கான  இறுதி நாள் மார்ச் 28-ஆம் தேதியில் இருந்து 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு வரும்  6-ஆம் தேதி தொடங்க உள்ளதை அடுத்து, பத்தாம் வகுப்பு  தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுத இயலாத நிலையில்  உள்ள மாணவர்களையும், பள்ளிகளில் இருந்து இடைநின்ற வர்களையும் அடையாளம் காண வேண்டும் எனவும், தேர்வுக்கு வர இயலாத மாணவர்கள் விவரங்களை மாவட்ட வாரியாக  திரட்ட வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் களுக்கு  பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.