states

img

‘நியூஸ் கிளிக்’ ஆசிரியர் கைது

‘நியூஸ் கிளிக்’ நிறுவனத் துக்குச் சீனாவிடமிருந்து நிதி வருகிறது என்று அமெ ரிக்க ஊடகமான ‘தி நியூயார்க்  டைம்ஸ்’ பொய்ச் செய்தி வெளி யிட்டது.  அதனடிப்படையில், 2021 செப்டம்பரில் ‘நியூஸ் கிளிக்’ ஊடக அலுவலகத்தில் சோதனையிட்ட அமலாக்கத்துறை, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், ‘நியூஸ்  கிளிக்’ நிறுவனத்தின் முதன்மை  ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா வுக்குச் சொந்தமான ரூ. 4.5 கோடி  மதிப்பிலான வீட்டையும் ரூ. 41 லட்  சம் நிரந்தர வைப்புத் தொகையை யும் முடக்கியது.  இதன் தொடர்ச்சியாக, செவ்வா யன்று (2023 அக்டோபர் 3 அன்று)  ‘நியூஸ் கிளிக்’ ஊடகம் மற்றும் அத னுடன் தொடர்புடைய பத்திரிகை யாளர்களுக்குச் சொந்தமான 100  இடங்களில் 12 மணிநேர சோதனை  நடத்திய தில்லி காவல்துறை, செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தது. ‘நியூஸ் கிளிக்’ ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் 9 பேரிடம், 25 கேள்விகள் அடங் கிய பட்டியலைக் கொடுத்து விசா ரணை நடத்தியது.  முன்னதாக, சட்டவிரோத நட வடிக்கைகள் தடுப்புச் சட்டம் எனப்  படும் ‘உபா’ (UAPA) சட்டத்தின் கீழ்  புதிய வழக்கு ஒன்றைப் பதிவு செய்த, தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, 12 மணிநேர சோதனை, விசாரணைக்குப் பின்,  ‘நியூஸ் கிளிக்’ முதன்மை ஆசிரியர்  பிரபீர் புர்காயஸ்தா, மனிதவள பிரி வின் தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோரை இரவு கைது செய்தது.  

‘நியூஸ் கிளிக்’ மீதான தாக்கு தல் நாடு முழுவதும் அதிர்வலை களை ஏற்படுத்தியது. ‘இந்தியா’  கூட்டணியிலுள்ள எதிர்க்கட்சிகள்  மற்றும் இந்திய பத்திரிகை ஆசிரி யர் சங்கம், பத்திரிகையாளர் களின் தேசிய கூட்டமைப்பு, தில்லி  யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் மற்றும்  கேரளா யூனியன் ஆப் ஒர்க்கிங்  ஜர்னலிஸ்ட் உள்ளிட்ட அமைப்புக் கள், ‘இது மோடி அரசின் ஒடுக்கு முறை’ என்று கண்டனம் தெரிவித் துள்ளன. எனினும் ‘நியூஸ் கிளிக்’ முதன்மை ஆசிரியர் பிரபீர் புர்கா யஸ்தா, மனிதவள பிரிவின் தலை வர் அமித் சக்ரவர்த்தி ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய தில்லி காவல்துறை, தற்போது விசாரணைக்காக 7 நாள் போலீஸ் காவலிலும் எடுத்துள்ளது. ஆனால், செவ்வாயன்று காலையே எப்ஐஆர் பதிவு செய் யப்பட்டும், அதன் நகலை தில்லி காவல்துறை வழங்கவில்லை. கைது நடவடிக்கை மேற் கொண்டு, புர்காயஸ்தா, அமித் சக்ரவர்த்தி ஆகியோரை போலீஸ்  காவலுக்கும் கொண்டு சென்று விட்டனர். எப்ஐஆர் பதிவு செய்தும்  24 மணிநேரத்திற்கும் மேலாகி விட்டது. எனினும் அதன் நகலை  தில்லி காவல்துறை வழங்கவில்லை. இதையடுத்து, எப்ஐஆர் நக லைக் கோரி, பிரபீர் புர்காயஸ்தா, அமித் சக்ரவர்த்தி ஆகியோரின் வழக்கறிஞர்கள் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.