சென்னை, ஜூலை 7- ஒற்றைத்துவக் கண்ணோட்டம், வெறுப்பர சியலால் படைப்புச்சுதந்திரத்திற்கு விடுக்கப் படும் அச்சுறுத்தல்களுக்கு தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத்தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் இராமலிங்கம், பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: “…கருத்துரிமையைச் சிறப்பாகவும் உண்மையாகவும் பயன்படுத்துவதென்பது தலையீடு செய்யாமல் இருக்கும் அரசின் கடமையை மட்டுமே நம்பியிருக்கவில்லை; மாறாக தனிநபர்களுக்கு இடையிலான உறவு களிலும் கூட பாதுகாப்பிற்கு சாதகமான நட வடிக்கைகளும் அதற்குத் தேவைப்படக் கூடும். உண்மையில் சில நேரங்களில் தனிப் பட்ட நபர்களிடமிருந்து பாதிப்புகள் எதுவும் ஏற்படாத வகையில் கருத்துரிமையைப் பாது காக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உள் ளது… இத்தகைய (கும்பல்) குழுக்கள் தணிக்கை செய்வதைத் தடுப்பதற்கான பொறுப்பு அரசிற்கு உள்ளதோடு, எழுத்தாள ரின் உயிர், கருத்துரிமை ஆகியவற்றை பாது காப்பதற்கான சாதகமான பொறுப்பும் அர சிற்கு உள்ளது…
“… கற்பனையான கதாபாத்திரங்களைக் கொண்ட எந்தவொரு கவிதை, நாடகம் அல்லது நாவல் ஆகியவற்றில் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான உரிமையானது அவதூறு என்ற அம்சத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்…” - பெருமாள் முரு கன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தால் மேற்கோள் காட்டப்பட்ட இவ்வரிகளுக்கு நடைமுறை வாழ்வில் எவ்வித மதிப்புமில்லை. கன்னட நாடகமான “ஜோதேகிருவனு சந்திரா” மற்றும் “காளி பட விளம்பரத்தாள்” ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள இடையூறு களும் அச்சுறுத்தல்களும் இதற்கான உட னடிச் சான்றுகளாகும்.
பஜ்ரங்தள், ஶ்ரீராம்சேனாவின் அட்டூழியம்
புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் ஜெயந்த் கைகினி எழுதிய ‘ஜோதேகிருவனு சந்திரா’ என்ற நாடகத்தை ரங்கபெலக்கு என்கிற நாட கக்குழுவானது, கன்னட சாகித்ய பரிஷத், கர்நாடக ஜனபத பரிஷத், கன்னட சம்ஸ்கிரு திக வேதிகே ஆகிய அமைப்புகளின் ஏற்பாட் டில் கர்நாடக மாநிலம் ஹனவட்டி என்கிற இடத்திலுள்ள வீரசைவ கல்யாண மண்டபத் தில் 03.07.2022 அன்று இரவு நடத்திக் கொண்டி ருந்தது. பஜ்ரங்தள், ஶ்ரீராம்சேனா அமைப்பி னர் “முஸ்லிம்கள் நாடகமாந்தர்களாக வரும் இந்த நாடகத்தை இந்துக்களின் மண்ட பத்தில் நடத்தக்கூடாது” என்று அங்கு தகராறு செய்து அச்சுறுத்தி நாடகத்தை மேற்கொண்டு நடத்தவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். முஸ்லிம்கள் நாடகமாந்தர்களாக புழங்கு வதைக்கூட சகித்துக்கொள்ள முடியாத அள வுக்கு இஸ்லாமிய வெறுப்பேறி நடத்தப்பட் டுள்ள இந்த அத்துமீறல் நாடக நிகழ்வாக்கம் மீதான சட்டவிரோதத் தணிக்கையுமாகும் என தமுஎகச கருதுகிறது.
‘காளி’
இதேபோல “காளி” என்கிற படத்தின் விளம்பரத்தாளில் இடம்பெற்றுள்ள விச யங்களுக்காக அப்படத்தின் இயக்குனரும் தமிழ் எழுத்தாளருமான லீனா மணிமேகலை யும் அவரது குழுவினரும் அச்சுறுத்தலுக்கும் அவதூறுகளுக்கும் ஆளாகியுள்ளனர். இந்துக் கடவுளாகிய காளியை அவமதித்துவிட்டதாக லீனா மீதும் அவரது குழுவினர் இருவர் மீதும் தில்லியிலும் உத்தரப்பிரதேசத்திலும் வழக்கு கள் பதியப்பட்டுள்ளன. கனடாவிலுள்ள இந்திய உயர் ஆணையரகம் அங்குள்ள நிர்வா கத்திடம் எதிர்ப்பு தெரிவித்து ‘காளி’ திரை யிடலை தடுத்துள்ளதன் மூலம் இந்திய அரசே நேரடியாக தலையிட்டுள்ளதை அறியமுடி கிறது. திரையிடலுக்கு ஏற்பாடு செய்திருந்த அமைப்பு நெருக்கடியின் அழுத்தம் தாளா மல் வருத்தம் தெரிவித்துள்ளது. லீனாவின் தலையைத் துண்டித்தெறியப் போவதாக சாது(?) ஒருவர் மிரட்டியுள்ளார்.
தொல்குடிகளும் அடித்தட்டு மக்களும் தம்மிடமிருக்கிற, தமக்கு விருப்பமான பொருட்களையே தமது தெய்வங்களுக்கும் படையலிடுகின்றனர். அவ்வகையில் கறி, மீன், கருவாடு, சாராயம், சுருட்டு, பீடிக்கட்டு உள்ளிட்டவற்றையும் படையலாக ஏற்கும் ஓர் உக்கிரத் தெய்வமே காளி. தீயவைகளை அழிக்கும் சக்தியாகிய அவள் ஒருவருக்குள் இறங்கி காளி ரூபத்திலேயே வீதியுலா சென் றால் அவரை மக்கள் எவ்வாறு வரவேற்று கொண்டாடுவார்கள் என்பதையே நேரடிப்பதி வாக – நிகழ் ஆவணப்படமாக தான் தயாரித்தி ருப்பதாகவும், அவ்வாறு வீதியுலா சென்ற காளிக்கு தெருவோர வறியவர் ஒருவர் தன்னி டமிருந்த ஒற்றைச் சிகரெட்டை காணிக்கை யாக படைத்து புகைக்கச் சொன்னதையே விளம்பரத்தாளில் வெளியிட்டிருப்பதாகவும் இதில் அவமதிக்கும் நோக்கம் ஏதுமில்லை என்றும் லீனா அளித்துள்ள விளக்கத்தை ஏற்கா மல் அச்சுறுத்தல்கள் ஏவப்படுகின்றன. லீனா வுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்த நாடாளு மன்ற உறுப்பினர் மஹூவா மொய்த்ராவும்கூட இதேரீதியான அச்சுறுத்தலுக்கும் அவதூறு களுக்கும் ஆளாகியுள்ளார்.
கடவுளும் உங்கள் கட்டுப்பாட்டிலா?
கடவுள் உருவம் என்பதே மனிதர்களின் கற்பனையில் உருவானதாயிருக்க, காளியை தனக்குகந்த வடிவத்தில் உருவகித்துக் கொள் ளவும் பன்முகத்தன்மையுடன் வழிபடவு மான சுதந்திரம் காளியை நம்புகிற எவருக்கும் உண்டு. கடவுள் வேடமணிந்து பிச்சையெடுப் பது, புகைப்பது, மது அருந்துவது, நவீன காலத்தில் அவதரித்து வந்து மனிதர்களிடம் சிக்கிக்கொண்டு அல்லாடுவது அல்லது அருள் பாலிப்பது என எண்ணற்ற நாடகங்களி லும் திரைப்படங்களிலும் புனைகதைகளிலும் கடவுள் சித்தரிக்கப்பட்டுள்ள நிலையில் காளி படத்தின் மீதான சர்ச்சை அவசியமற்றது.
கடவுளேயானாலும் தங்களுக்கு கட்டுப்பட்டே இருக்க வேண்டும் என்று கட வுள்களின் உருவம், படையல், சடங்குகள் மீது ஆதிக்கம் செலுத்தும் ஒற்றைத்துவக் கண்ணோட்டத்திலிருந்தும் வெறுப்பரசிய லில் இருந்தும் வரும் இத்தகைய அச்சுறுத் தல்களையும் அவதூறுகளையும் கண்டிக்க முன்வருமாறு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்தி ரத்தில் நம்பிக்கையுள்ள யாவரையும் தமு எகச கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.