சென்னை, மே 21- தமிழ்நாட்டு நிலைமைகளுக்கேற்ப தனித்துவமான மாநில கல்விக் கொள் கையை உருவாக்கிட நிபுணர்களைக் கொண்ட உயர்மட்டக்குழு அமைத் துள்ள தமிழ்நாடு அரசின் நடவடிக் கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஒன்றிய பாஜக அரசு தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் நாடு முழு வதும் கல்வியில் சனாதன இந்துத்துவ கோட்பாட்டை புகுத்த தீவிரமாக முயற் சித்து வருகிறது. இதுமட்டுமின்றி பாடப் புத்தகங்களை மாற்றியமைப்பது, சுதந்திரப் போராட்ட வரலாறு உட்பட இந்திய வரலாற்றை மத அடிப்படை யில் மாற்றி, மாணவர்களுக்கு கற்பிப் பது போன்ற ஆபத்தான நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. ஒன்றிய அரசின் இத்தகைய தவ றான நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டு நிலைமைகளுக்கேற்ப தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உரு வாக்கிட நிபுணர்களைக் கொண்ட உயர் மட்டக்குழு அமைத்தது. தமிழ்நாடு அர சின் இந்த நடவடிக்கை பெரும் பாராட்டைப் பெற்றதுடன் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விஞ்ஞான அடிப்ப டையிலான கல்வி கிடைத்திட நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு கல்விக்கொள்கை உருவாக்குவதற் கான பல நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ள நிலையில், குழுவின் செயல்பாடுகள் குறித்து பத்திரிகை களில் வந்த செய்தி மிகுந்த கவலை யளிப்பதாக இருந்தது. தமிழ்நாடு அர சின் உயர்ந்த நோக்கம் பாதிக்கப் படுமோ என்ற கேள்விகளும் கல்வியா ளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழும்பியது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு மாநில அடிப்படையிலான கல்விக் கொள்கை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க கவனம் செலுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முதலமைச்சரைச் சந்தித்து முறையிட்டோம். பல்வேறு தரப்பினரி டமிருந்து வந்த கருத்துகளை கவ னத்தில் எடுத்துக்கொண்டு, குழுவை சீரமைத்துள்ளதுடன் தமிழ்நாட்டிற்கு என ஒரு தனித்துவமான மாநிலக் கொள் கையை உருவாக்கும் பணியில் இக் குழு ஈடுபடும் எனவும், குழுவின் அறிக்கை வரப்பெற்றதும் அதில் உள்ள பரிந்துரைகளை அரசு கவனமுடன் பரிசீலித்து தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்கால நலன் மற்றும் நம் மாநி லத்தின் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிறப்பானதொரு கல்விக் கொள்கையை வகுக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறி வித்துள்ளதை வரவேற்பதுடன், மேலும் காலதாமதம் செய்யாமல் விரைவில் அறிக்கையைப் பெற்று அதன் மீது சிறப்பானதொரு கல்விக் கொள்கை யை வகுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.