states

காதலிக்க மறுத்ததால் இளைஞர் வெறிச்செயல் குளிர்பானத்தில் விஷம்: கல்லூரி மாணவி பலி

திருச்சிராப்பள்ளி, மே 23 - திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சிவயல் புதூரை சேர்ந்த 19  வயது மாணவி ஒருவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் பாய்லர் ஆலை பகுதியில் மணி யம்மை நகரில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி கல்லூரிக்கு தினமும் சென்று வந்தார். இந்நிலையில் கடந்த மே 17 ஆம் தேதி வயிற்றுவலி மற்றும் உடல்  சோர்வு காரணமாக ஒரு தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார். மாணவியை பரிசோதித்தபோது அவர் சாப்பிட்ட உணவில் விஷம் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் பாய்லர் ஆலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் மருத்துவமனைக்கு சென்று அந்த மாணவியிடம் வாக்குமூலம் பெற்றனர்.  அதில் அந்த மாணவி போலீசாரிடம், கடந்த ஒரு மாதமாக தன்னை ஒருவன் பின் தொடர்ந்து வந்தான். கடந்த மே  11 அன்று கல்லூரி முடிந்து வீட்டிற்கு  வந்தபோது, அந்த நபர் என்னை காத லிப்பதாக கூறினான். அதனால் அவரை  நான் அடித்தேன். இதையடுத்து கடந்த மே 12 ஆம் தேதி கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தபோது, என்னை காதலிப் பதாக கூறிய நபர் உள்பட 3 வாலிபர்கள் சேர்ந்து, என்னை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அருகில் உள்ள ஒரு  சந்தில் வைத்து விஷம் கலந்த குளிர்பா னத்தை கொடுத்து குடிக்க செய்தனர் என  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அந்த மாணவி தனி யார் மருத்துவமனையிலிருந்து சனிக்கிழமை திருச்சி அரசு மருத்துவ மனையில் மேல் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர  சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி  ஞாயிற்றுக்கிழமை மதியம் மாணவி பரி தாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டச்  செயலாளர் ராஜா வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதா வது: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே கல்லூரி மாணவி ஒருவர் காத லிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த 3 பேர் கொண்ட கும்பல், விஷம் கலந்த குளிர்பானத்தை கட்டாயப்படுத்தி கொடுத்ததாக மாணவி தெரிவித்த நிலையில், சிகிச்சை பலனில்லாமல் அவர் ஞாயிற்றுக்கிழமை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  கல்லூரி மாணவி இறப்பிற்கு காரண மான குற்றவாளிகள் மீது கொலை  வழக்குப்பதிவு செய்து குற்றவாளி களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இளம்பெண்ணை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமிழக அரசு  ரூ.25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.  மேலும் இறப்பிற்கு நியாயம் கேட்டு  போராடிய மக்கள் மீது முன்னறிவிப் பின்றி தடியடி நடத்திய காவல்துறையை வன்மையாக கண்டிப்பதோடு மேற் கண்ட சம்பவத்திற்கு நியாயம் வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.