மதுரை,டிச.27- மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை புறநகர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய 400 கிலோமீட்டர் நடைபயணம் டிசம்பர் 27 செவ்வாயன்று மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன்பு நிறைவடைந்தது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவ மனை கட்டு மானப் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும். தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சி (நெய்பர்) நிறுவனத்தை அமைக்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தை ஒன்றிய அரசு முழுமையாக அமல்படுத்த வேண்டும். சோழவந்தான், மதுரை கிழக்கு தாலுகாவில் அரசுக் கல்லூரி அமைக்க வேண்டும் மற்றும் கிராமங்களில் அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை புற நகர் மாவட்டத்தில் 400 கிலோமீட்டர் நடை பயணம் டிசம்பர் 23 அன்று துவங்கியது.
கொட்டாம்பட்டி, கள்ளிக்குடி, எழுமலை, குருவித்துறை ஆகிய பகுதிகளில் இருந்து துவங்கிய நடைபயணம் டிசம்பர் 27 செவ்வா யன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நிறைவுபெற்றது. இதன்பின்னர் அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமு வேல்ராஜ் துவக்கவுரையாற்றினார். மாநி லக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத் தாய், எஸ்.பாலா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் வாழ்த்திப் பேசி னார். மாநிலச் செயற்குழு உறுப்பினரும் மதுரை மக்களவை உறுப்பினருமான சு.வெங்கடேசன் நிறைவுரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாநக ராட்சி துணை மேயர் தி.நாகராஜன், புறநகர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் த.செல்லக்கண்ணு, பா.ரவி, எஸ்.பி.இளங் கோவன், வி.பி.முருகன், செ.முத்துராணி, வி.உமாமகேஸ்வரன், பி.ஜீவானந்தம், மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டிச் செயலாளர்கள், ஒன்றிய மற்றும் தாலுகாக்குழு உறுப்பினர்கள், கிளைத்தோழர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக கோரிக்கை கள் அடங்கிய மனுவை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகரிடம் கட்சியின் தலைவர்கள் நேரில் வழங்கினர்.