புதுதில்லி, மார்ச் 1- இன்று (புதன்) முதல் சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு 50 ரூபாய் உயர்த்தி இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விலை யேற்றம், ஏற்கனவே அனைத்து உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர் வால் அல்லல் உற்று அவதிப்பட்டுக் கொண்டி ருக்கும் மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்றிடும் என்றும் கூறியுள்ளது. இது தொடர்பாகக் கட்சியின் அரசியல் தலை மைக்குழு மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்த விலை உயர்வின் காரணமாக மேலும் மக்கள் மானிய விலையில் அளித்து வந்த சமை யல் எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்து வதை விலக்கிக் கொண்டுவிடுவார்கள். அவர் களால் இந்த விலை உயர்வை அளித்திட முடி யாது. ஏற்கனவே உஜ்வாலா யோஜனா திட்டத் தின்கீழ் சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றவர்களில் 10 விழுக்காட்டிற்கும் மேல் கடந்த ஓராண்டில் திரும்ப சிலிண்டர் எதுவும் பெறவில்லை. சுமார் 12 விழுக்காட்டினர் ஒரே யொரு சிலிண்டரைத்தான் பெற்றார்கள்.
ஒவ் வொருவரும் ஆண்டொன்றுக்கு 12 சிலிண்டர் கள் வரை பெறலாம் என உரிமை வழங்கப்பட்டி ருந்தபோதிலும், சராசரியாக ஒருவர் 7 சிலிண்ட ருக்கு மேல் பெறக்கூடிய நிலையில், மொத்தம் உள்ள வாடிக்கையாளர்களில் 56.5 விழுக்காட்டி னர் 4 அல்லது அதற்கும் குறைவாகவே சிலிண் டர்களைப் பெற்றிருக்கிறார்கள். வர்த்தகரீதியிலான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இந்த ஆண்டில் இரண்டா வது தடவையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தில்லியில் ஒரு சிலிண்டரின் விலை 1,769 ரூபாய் என்பதற்குப் பதிலாக 2,119.5 என்று ஆகிறது. இதன் விளைவாக அனைத்து உணவுப் பொருள்களின் இடுபொருள் கட்ட ணங்கள் உயர்ந்து, அவற்றின் விலைகள் மேலும் உயரும். நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை மற்றும் பணவீக்கம் கடுமையாக உயர்ந்திருக்கக்கூடிய பின்னணியில் இந்தக் குரூரமான விலை உயர்வு வந்திருக்கிறது. இந்த விலை உயர்வுகளை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அரசியல் தலை மைக்குழு வலியுறுத்துகிறது.இவ்வாறு அரசி யல் தலைமைக்குழு அறிக்கையில் கோரி யுள்ளது. (ந.நி.)