தொடரும் ஆளுநரின் சர்ச்சைகள்
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்ட பிறகு, 2022 ஆம் ஆண்டில் முதன் முறையாக திமுக அரசின் முதல் உரையை முதன் முறையாக படித்தார். அன்றைக்கு அரசின் புதிய அறி விப்புகள், திட்டங்கள் குறித்து தனது உரை யில் விரிவாகவும் விளக்கமாகவும் வாசித்தார். அதைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டில், தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர். என் ரவி வாசித்தார். அப்போது, அந்த உரை யில் சிலதை வெட்டியும், ஒட்டியும், சில வார்த்தைகளை மாற்றியும் இடை இடையில் சொருகி கொண்டார். இது அவையில் பெரும் புயலை ஏற்படுத்தியது. மதச்சார்பின்மை, சமூகநீதி, சுயமரியாதை, திராவிட மாடல், தமிழ்நாடு, மகளிர் முன்னேற்றம் என்ற வார்த்தைகளை அறவே தவிர்த்தார். மேலும் பெரியார், அம்பேத்கர் பெயரையும் வாசிக்க வில்லை. அத்துடன், அறிக்கையின் 65வது பத்தியை வாசிக்காமல் முழுமையாக கடந்து விட்டார். ஆளுநர் இப்படி அரசின் உரையை வாசிக்காமல் சில மாற்றங்களை செய்வது தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும். அரசு கொடுத்த உரையில் இருப்பதுதான் அவையில் நிறைவேறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேருக்கு நேர் பதிலடி கொடுக்க, இதனால் அவமானப்பட்ட ஆளு நர் ரவி அடுத்த சில வினாடிகளில் அவை யில் இருந்து வெளியேறினார். அதைத் தொடர்ந்து தீர்மானம் கொண்டு வந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசு இயற்றிய பாகங்கள் சில இடம்பெறவில்லை. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி அப்படியே முழுமையாக படிக்க வேண்டும். ஆனால் முழுமையாக படிக்க வில்லை என்றும் சில வார்த்தைகளை படிக்கா மல் தவிர்த்துவிட்டார். இதனால் அவ ரின் உரையில் சுயமாக பேசிய வார்த்தை களை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானம் தாக்கல் செய்கி றேன். ஆளுநர் உரையை முழுமையாக படிக்காதது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையின் வாசகம் மட்டுமே அவையின் குறிப்பேட்டில் பதியப்பட்டது. அதன் பின்னர், 2024 ஆம் ஆண்டிலும் அரசு தயாரித்த அறிக்கையை முன் கூட்டியே அனுப்பி வைத்து ஒப்புதல் பெறப்பட்டது. அதன்பிறகு, முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது. சட்டப்பேரவைக்கு வருகை தந்த ஆளுநர் ரவி, உரையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடவில்லை என்று கூறியதுடன் உரையில் ஒரு வரிக்கூட படிக்காமல் வெளியேறியது மீண்டும் புயலை கிளப்பியது. இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டின் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் ஜன.6 ஆம் தேதி கூடியது. இந்த முறை யும் அரசின் உரையை படிக்காமல் வெளி யேறியதுடன், தேசிய கீதம் பாடவில்லை என கூறியிருப்பது மீண்டும் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறது.
சிறப்பு அலுவலர்கள் நியமனம்
சென்னை, ஜன. 6- தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி, ஒன்றியக் குழு, கிராமப்புற ஊராட்சி என, 3 அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளில், 5 ஆண்டுக்கு முன் நடை பெற்ற உள்ளாட்சி தோ்தலில் வெற்றி பெற்று பதவி வகித்த தலைவா், துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா்கள் பதவிக் காலம் ஞாயிற்றுக்கிழமை யுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமித்து தமிழக அரசு திங்கள் கிழமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 9,624 கிராம ஊராட்சிகள், 314 ஊராட்சி ஒன்றியங்கள், 28 மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எச்எம்பிவி வைரஸ் ; அச்சம் தேவையில்லை
பொது சுகாதாரத்துறை அறிவிப்பு
சென்னை,ஜன.6- தமிழகத்தில் உருமாற்றம் அடைந்த எச்எம்பிவி பாதிப்புகள் இல்லை, பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று பொது சுகாதாரத்துறை அறி வுறுத்தியுள்ளது. எச்எம்பிவி வைரஸ் காய்ச்சல் நீண்டகாலமாக வழக்கத்தில் இருக்கும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் தான். சீனாவில் இருப்பது போல் உருமாற்றம் அடைந்த எச்எம்பிவி வைரஸ் எதுவும் தமிழகத்தில் இல்லை என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனை டீன் தேரணி ராஜன் கூறுகையில், ”இந்த வைரஸ் பற்றி கவலைப்பட ஏதும் தேவையில்லை. பொதுவாக விண்டர் சீசன், மழைக்காலங்களுக்கு பிறகு வரக்கூடிய வைரஸ் இது. இதனால் அச்சப்படக்கூடிய தேவையில்லை என்று தெரிவித்தார்.