states

தீக்கதிர் வைரவிழா - சங்கரய்யா வாழ்த்து

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இதழான ‘தீக்கதிர்’ 60 ஆண்டு காலம் சேவை செய்து இன்றைக்கு 60 ஆண்டு வைரவிழா கொண்டாடுவதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ‘தீக்கதிர்’ அலுவலக வளாகத்திற்கு, நாளிதழ் சிறப்பாக செயல்படுவதற்கு அயராது போராடிய தோழர் கே.முத்தையா பெயர் சூட்டப்படுவது மிகவும் பொருத்தமானது. கே.எம். பெயர் சூட்டுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சர்வதேச செய்தி, தேசிய செய்தி, மாநிலச் செய்திகளை திட்டத் தெளிவாக மக்களுக்கு எடுத்துக் கூறக் கூடிய ‘தீக்கதிர்’ பத்திரிகை தமிழகத்திற்கு மகத்தான சேவை செய்து வருகிறது. அந்த பத்திரிகையினுடைய வைரவிழா கொண்டாடப்படுவது மிகவும் சிறப்புடையதாகும். மேலும் மேலும் சிறந்த முறையில் பத்திரிகை வளர்ந்து, பல சிறப்பான அம்சங்களுடன் முன்னேறி, தமிழ்நாட்டு மக்களுக்கு மக்கத்தான சேவை புரிய வேண்டுமென்று எனது புரட்சிக்கரமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்குலாப் ஜிந்தாபாத்.