சென்னை, நவ. 28- ஒன்றிய பாஜக அரசு இந்தியா முழுவதும் உள்ள சிறுபான்மையினர் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையை நிறுத்தி யதை கண்டித்து டிசம்பர் 17ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட் டம் நடைபெறும் என தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக் குழு தெரி வித்துள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது, பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாநில பொரு ளாளர் அகமது உசேன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசின் பொறுப்பிற்கு பாஜக வந்ததிலிருந்து ஒரு பக்கம் சிறு பான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்து வது, அவர்கள் குடியுரிமையை கேள்வி க்குறியாக்குவது என்பதை எல்லாம் தாண்டி அவர்களின் வாழ்நிலை மேம்பாட்டுக்கு கிடைத்திருக்கிற உரிமைகளை சிதைக்கும் வேலையை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திய பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படியிலக் கூடிய மாண வர்களுக்கான கல்வி உதவித் தொகை யை நிறுத்துவது என பாஜக அரசு அறி வித்துள்ளது. கல்வி மற்றும் வாழ் நிலையில் இந்தி யாவில் மிகவும் பின்தங்கிய நிலையில் வாய்ப்பு வசதிகளற்று இருக்கக்கூடிய சிறுபான்மை மாணவர்களுக்கு ஒன்றிய அரசு வழங்கி வந்த கல்வி உதவித்தொகை ஓரளவுக்கு கை தூக்கி விடுவதற்கு உதவியது. இந்த குறைந்தபட்ச வாய்ப்பைக் கூட மறுத்து கல்வி நிலையங்களில் இருந்து சிறுபான்மையினரை வெளியேற்று வதற்கான முயற்சியை மதவெறி பாஜக அரசு செயல்படுத்த துடிக்கிறது.
இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடி மகனுக்கும் கல்வி வழங்க வேண்டியது அரசின் கடமையாகும். இங்கு 14 வயது வரை ஆரம்பக் கல்வி கட்டா யமாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆரம்பக் கல்வி கட்டாய சட்டத்துக்கு எதிராக ஒன்றிய அரசின் செயல்பாடு அமைகிறது. சட்டத்திற்கு புறம்பாக சிறுபான்மை மக்களின் நலனுக்கு புறம் பாக செயல்படும் ஒன்றிய அரசின் இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. எனவே ஒன்றிய அரசு சிறுபான்மையினர் மாணவர்க ளுக்கான கல்வி உதவித் தொகையை தொடர்ந்து வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் வரும் டிசம்பர் 17ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மேலும் இந்தியாவில் சிறுபான்மை யினர் மீதான தாக்குதலை கண்டித்தும், சிறுபான்மை மக்களின் குடியிருப்பு களை உத்தரவாதப்படுத்த பட்டா வழங்க வலியுறுத்தியும், வக்பு வாரிய இடங்களில் ஏழை, எளிய சிறுபான்மை மக்களுக்கு குடியிருப்புகள் அமைத்து தர வலியுறுத்தியும், நீதிக்கு புறம்பாக தமிழக சிறைகளிலே அடைக்கப்பட் டுள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடு தலை செய்ய வேண்டும் என வலியு றுத்தியும் சர்வதேச சிறுபான்மையினர் உரிமை தினத்தை முன்னிட்டு டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக எண்ணம் கொண்ட அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.