நாகர்கோவில், ஜூன் 21 தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதி யில் 40க்கும் மேற்பட்ட பரிசல்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள், பாதுகாப்பு உடை கள் அனைத்தும் சமூக விரோதிகளால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதற்கு மீன் பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு சிஐடியு சார்பில் வன்மையான கண்டனம் தெரி விக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் பரிசல் துறையில் 20.06.22 இரவு7மணிக்கு நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த 40 க்கும் மேற்பட்ட மூங்கில் படகு கள், சம்பவம் நடந்த இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட பாதுகாப்பு உடைகள் சமூக விரோதி களால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். சம்பவத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும், பரிசல் நிறுத்தப்பட்டிருக்கின்ற இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், பரிசல் இழந்த தொழிலாளிகளுக்கு பரிச லை கட்டமைக்க நிதி வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு மீன் பிடி தொழிற்சங்க கூட்ட மைப்பின் சார்பில் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.