states

img

பருத்தி, நூல் விலையைக் கட்டுப்படுத்துக: ஒன்றிய அமைச்சரிடம் முதல்வர் வலியுறுத்தல்

சென்னை, மே 19- பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு  கொண்டு வலியுறுத்தி யுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை  வருமாறு:- தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழனன்று(மே 19) ஒன்றிய ஜவுளி, வர்த்தகம்  மற்றும் தொழில் துறை, நுகர் வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை தொலைபேசி வாயி லாக தொடர்பு கொண்டார். அப்போது, பருத்தி மற்றும் நூல் விலை உயர்வினால் தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான இடையூறுகள் குறித்து எடுத்துரைத்தார். பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனடி யாக நடவடிக்கை எடுக்க  வேண்டுமென்று வலியுறுத்தி னார். முன்னதாக, தமிழக முதல்வர் கடந்த 19.1.2022 அன்று பருத்தி மற்றும் நூல்  விலையைக் கட்டுப்படுத்து வதற்கான நடவடிக்கை களை எடுக்கக்கோரியும், தமிழ்நாட்டில் நெசவாளர் கள், ஆடை மற்றும் பின்ன லாடை உற்பத்தியாளர் கள் சந்தித்து வரும்  கடுமையான நிலையினை யும் விளக்கி ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். மேலும், பிரதமருக்கு 16.5.2022 அன்று பருத்தி மற்றும் நூல் விலை உயர்வி னால் தமிழகத்தில் ஜவுளித் தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். அதுமட்டுமின்றி, நாடா ளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் அனைத்துக் கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஒன்றிய நிதிஅமைச்சரை புதனன்று(மே 18) இது தொடர்பாக சந்தித்து, பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக் கக்கோரி முதல்வரின் கடிதத்தை அளித்துள்ளார். இவ்வாறு கூறப்பட் டுள்ளது.