states

தீக்கதிர் விரைவு செய்திகள்

10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

திருநெல்வேலி, ஜூன் 7- காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய  எச்சரிக்கையின்படி நெல்லை மாவட்ட மீனவர்கள் வருகிற 9-ம் தேதி வரை கடலுக்கு  மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இதனால் நெல்லை மாவட்டத் தில் உள்ள 10 கடலோர மீனவ கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரம் மீனவர்கள் புதன்கிழமை  கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

அமித் ஷா வீடு முன்பு குக்கி பழங்குடியின பெண்கள் போராட்டம்

புதுதில்லி, ஜூன் 7- தில்லியில் உள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இல்லத்துக்கு வெளியே மணிப்பூர் மாநிலத்தின் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்கள் கல வரத்தால் பாதிக்கப்பட்ட எங்கள் (மணிப்பூர்)  மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட பிர தமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்ச ரும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதனால் அமித் ஷா இல்லம் அமைந்துள்ள பகுதியான மீனா பாக் பகுதி பர பரப்பான சூழலை எதிர்கொண்டது.

பகானகா ரயில் நிலைய லூப் லைனிலும் ரயில் இயக்கம்!

ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோர மண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த ஜூன் 2 அன்று  பாலசோா் மாவட்டம்,  பகானகா பஜார் ரயில் நிலையம் அருகே விபத்துக்கு உள்ளானது. இதில் 288 பேர் உயிரிழந்தனர். இதனிடையே, விபத்து நடந்த பகுதியிலிருந்த தண்ட வாளங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, திங்களன்று மீண்டும் பயணிகள் ரயில் சேவை தொடங்கியது. இதுவரை, ‘வந்தே பாரத்’ உள்பட 70-க்கும் மேற் பட்ட ரயில்கள், விபத்து நிகழ்ந்த கடந்து சென்றுள்ளன. சென்னையில் இருந்து ஷாலிமர் செல்லும் கோரமண்டல் விரைவு ரயிலும் செவ்வாய்க்கிழமை கடந்து சென்றது. விபத்து நிகழ்ந்த பகுதியைக் கடக்கும்போது, மணிக்கு 30 கி.மீ. என்ற  குறைவான வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது. இந்நிலையில், பகானகா ரயில் நிலையத்தில் உள்ள லூப் லைனிலும், பத்ராக் மாவட்டம் தாம்ரா துறைமுக பகுதியில் இருந்து வந்த சரக்கு ரயில் இயக்கப்பட்டது.

விபத்து: ஆயிரக்கணக்கில் ரத்தான ரயில் டிக்கெட்டுகள்?

ஒடிசாவில், 3 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட கோர  விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். 1,175 பேர் படுகாயமடைந்த னர். இதில், சுமார் 900 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டு விட்ட னர். எனினும், இந்த விபத்து ஏற்படுத்திய அதிர்ச்சி இன்னும் நீங்கவில்லை. ரயிலில் பயணம் செய்வதை பாதுகாப்பற்றதாக உணர்வதால், ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்து வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது. இதற்கு ஐ.ஆர்.சி.டி.சி. நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “ஒடிசா  ரயில் விபத்துக்குப் பிறகு ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்ட தாக காங்கிரஸ் கூறுவது முற்றிலும் தவறானது. டிக்கெட்டுகள் ரத்து செய்வது அதி கரிக்கவில்லை. மாறாக, 01.06.23 அன்று 7.7 லட்சமாக இருந்த டிக்கெட் ரத்து 03.06.23 அன்று 7.5 லட்சமாக குறைந்துள்ளது” என தெரிவித்துள்ளது.

ஐ.டி. வளாகங்கள்:  3 இடங்களில்  பணிகள் தொடக்கம்

சென்னை, ஜூன் 7- எல்காட் நிறுவனம் மூலம் தனியார் பங்களிப்புடன் 3 இடங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான வளாகங்கள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு எலக்ட் ரானிக்ஸ் கார்ப்பரேஷன், தகவல்  தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட் பம் சார்ந்த சேவைகள் வழங்குவதில் எல்காட் முக்கிய பங்காற்றுகிறது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை,  திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல் வேலி உள்ளிட்ட நகரங்களில் 1,378.16  ஏக்கர் நிலப்பரப்பில் 8 தகவல்  தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார  மண்டலங்களையும் உருவாக்கி யுள்ளது. இதன்மூலம் உள்ளூர் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை உலகளாவிய நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்க உதவி வருகின்றது. எல்காட் நிறுவனம் மூலமாக தனியார் பங்களிப்புடன் 3 இடங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான வளாகங்கள் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு – ஆலப்பாக்கம், ஈரோடு – பெருந்துறை கருமாண்டி செல்லிப்பாளையம், திருநெல்வேலி – பாளையங்கோட்டை மேலப்பாளை யம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட வுள்ள வளாகங்களுக்கான வடிவ மைப்பு, திட்டமிடல் குறித்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 2021-22 நிதியாண்டில் எல்கோசெஸ்கள் (ELCOSEZ) மூலமாக ரூ.22,958 கோடி அளவிற்கு ஏற்றுமதி, சுமார் 94,000 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஆவின் பால் பண்ணை பணியில் சிறுவர்கள் இல்லை: அமைச்சர்

சென்னை, ஜூன் 7- சென்னையில் பால்வளத் துறை  அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தி யாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை யில் சிறார்கள் பணியமர்த்தப்பட்டி ருப்பதாக ஊடகத்தில் செய்தி வந்தது. அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான ஒரு சித்தரிக்கப்பட்ட செய்தி.  அதற்கான ஆவணங்கள் என்னிடம் இருக்கிறது. அந்தச் செய்தியை பார்த்த வுடன், காவல் துறை உதவி ஆணை யரை அங்கு அனுப்பி, அப்படி ஏதாவது  சம்பவம் இருக்கிறதா என்று விசாரித்த போது, அவ்வாறு இல்லை என்பது தெரியவந்தது. ஒரு தனிநபர் தன்னுடைய போராட் டத்தை முன்னெடுக்க ஒரு சில நபர் களை அழைத்து வந்துள்ளார். அந்த நபருக்கும் அவரை பணியமர்த்திய நிறு வனத்துக்கும் சம்பளம் கொடுக்கல், வாங்கலில் பிரச்சனை இருப்பது தெரியவந்திருக்கிறது.  ஆனால், சிறார்கள் பணியமர்த்தப் பட்டார்கள் என்பது தவறான செய்தி  என்பதையும் காவல் துறை அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து நானும்  அதிகாரிகளும் அங்கு சென்று உடனடி யாக விசாரணை மேற்கொண்டோம். எங்களுடைய விசாரணையிலும், அங்கு எந்த சிறாரும் பணியமர்த்தப்பட வில்லை என்பது மிகத் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, இந்தத் திட்டமிட்ட செயல், ஆவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கின்ற நிலையிலும், எங்க ளுடைய வளர்ச்சிக்கு ஒரு குந்தகம்  விளைவிக்கின்ற விதத்திலும் இருக்கி றது. எனவே இந்த விவகாரத்தில் தவறு செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.