states

புயல் சின்னத்தால் மிக கனமழைக்கு வாய்ப்பு முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவு

சென்னை, நவ. 30 - வங்கக் கடலில் புயல் சின்னம் உரு வாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 14  கடலோர மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 21 அன்று தொடங்கியதிலிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் வியாழனன்று செய்தி யாளர்களை சந்தித்தார்.  அப்போது, “வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தொடர்ந்து நிலவி வருகிறது. இது மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். இதுதொடர்ந்து மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 3-ஆம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும். பின்னர் இது வட மேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 4  அன்று அதிகாலை வட தமிழகம் தெற்கு ஆந் திரா கடல் பகுதியில் புயலாகநிலவக்கூடும். டிசம்பர் 2 அன்று கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு  உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப் பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மிக  கனமழைக்கு வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார். இந்த நிலையில், சென்னை, காஞ்சி புரம், செங்கல்பட்டு உள்பட 14 கடலோர மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு வரு வாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க தேவையான நட வடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கரை திரும்பியதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.