சென்னை, ஏப்.17 வட தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக சேலம், நாமக்கல், பெரம்ப லூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் திங்களன்று (ஏப். 18) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது. இதேபோல், தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், கரூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்ப த்தூர், திருவண்ணாமலை, கள்ளக் குறிச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், தேனி, தென்காசி ஆகிய 15 மாவட்டங் களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுவை மற்றும் காரைக் கால் பகுதிகளில் ஏப்.18 ஆம் தேதி ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 19 ந் தேதி தென்தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய க்கூடும். 20 ந் தேதி வட தமிழக கடலோர மாவட் டங்கள், தென்தமிழகம், நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு ள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.