பரந்தூர் விமான நிலையம்: ஒப்பந்தம் கோரியது தமிழக அரசு
சென்னை, டிச. 5- சென்னையின் 2ஆவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பரந்தூரை சுற்றியுள்ள ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு, எடையார்பாக்கம், தண்டலம் உள்ளிட்ட 13 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. புதிய விமான நிலையத்துக்கு விளை நிலங்கள் கையகப்படுத்து வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனினும் பரந்தூர் புதிய விமான நிலை யத்துக்கான பூர்வாங்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விமான நிலைய மேம்பாட்டிற் கான சர்வதேச ஒப்பந்தப் புள்ளியை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கோரியுள்ளது. பசுமை விமான நிலையம் - சென்னை விமான நிலையம் இடையே சாலை, ரயில் இணைப்பு போக்குவரத்து தேவைகளை ஆராய வேண்டும், விமான போக்குவரத்தின் வளர்ச்சி நிலைகளை ஆய்வு செய்ய வேண்டும், 2069-70ஆம் நிதியாண்டு வரை போக்குவரத்தின் கணிப்புகள் இடம்பெற வேண்டும் என தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளது.
15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை. டிச. 5- காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வருகிற 8 ஆம் தேதி 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் திங்க ளன்று (டிச. 5) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். பிறகு, மேற்கு-வடமேற்கு திசை யில் நகர்ந்து புயலாக வலுவடைந்து டிசம்பர் 8ஆம் தேதி காலை வட தமிழகம் - புதுவை மற்றும் அதனை யொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் அருகில் வந்தடையக் கூடும். இதன் காரணமாக செவ்வாய்க் கிழமை (டிச. 6) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிக ளில் தமிழக கடலோர மாவட்டங்க ளான சென்னை, கடலூர், விழுப்புரம், செங்கற்பட்டு, திருவள்ளூர், மயிலாடு துறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் விலை ரூ.232 உயர்வு
சென்னை, டிச.5- தங்கம் விலை கடந்த 2 ஆம் தேதி சவரன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. ஞாயிறன்று (டிச.4) ஒரு சவரன் ரூ.40 ஆயிரத்து 128-க்கு விற்றது. இந்த நிலையில் சென்னையில் திங்களன்று (டிச.5) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 அதிகரித்து ரூ.40 ஆயிரத்து 360-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 45 ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயர்ந்து ரூ.72 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.72.50-க்கு விற்றது.
காஞ்சியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்: உயர்நீதிமன்றம் நம்பிக்கை
சென்னை,டிச.5- காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத் தில் தாக்கல் செய்த மனுவில், “காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல் பட்டு, காஞ்சிபுரம்என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள் ளது. காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் செங்கல்பட்டில் செயல்பட்டு வருகிறது. அங்கு ஓய்வு அறைகள் நீதிமன்ற அறைகளாக மாற்றப் பட்டுள்ளது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறு காவேரிப்பாக்கம் கிராமத்தில் காஞ்சி புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகம் கட்ட முடிவு செய்தும், இதுவரை அதற்கு தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை. இது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசார ணைக்கு வந்தபோது, கட்டிடம் கட்டு வதற்கான திருத்திய திட்டம் மற்றும் மதிப்பீடுகளை பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர், உயர் நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறி ஞர் முத்துக்குமார் தெரிவித்தார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஒருங்கிணைந்த நீதி மன்றம் கட்டுவதற்கான நிதியை விரைவில் ஒதுக்க அரசு நடவ டிக்கை எடுக்கும் என நம்பிக்கை தெரி வித்து வழக்கை முடித்து வைத்த னர்.
‘ரெட் அலர்ட்’ : மீனவர்களுக்கு எச்சரிக்கை
சென்னை, டிச.5- வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள் ளது. இது புயலாக வலு பெற்று தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. மீனவர்கள் டிச.6 முதல் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் சூறாவளி புயல் காற்று வீசும் என்பதால் தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. சென்னை உள்பட 13 மாவட்டங்களில் வரும் 8-ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள் ளது.
எண்ணெய் விலைக்கு கட்டுப்பாடு
ரஷ்யா கடும் எதிர்ப்பு
பிரஸ்ஸல்ஸ், டிச.5- ரஷ்யாவின் வருமானத்தைக் குறைப்பதற்காக அந்நாட்டுக் கச்சா எண்ணெய் விலையை ஒரு பீப்பாய்க்கு 60 அமெரிக்கா டாலர் என்ற விலையை ஜி7 நாடுகள் நிர்ணயித்திருப்பதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையைக் கட்டுப்படுத்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பெரும் முயற்சி செய்து வருகின்றன. உக்ரைன் மட்டுமில்லாமல், ரஷ்யாவின் எரிபொருளை நம்பியிருந்த அனைத்து ஐரோப்பிய நாடுகள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. எரிபொருள் விலை குறையாவிட்டால் மக்களின் கொந்தளிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐரோப்பிய நாடுகளின் ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள். இதனால், கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்தி விட வேண்டும் என்று ஜி7 நாடுகள் முடிவெடுத்தன. இதனால் ரஷ்யாவின் வருமானத்தையும் குறைத்து விட முடியும் என்று நம்புகிறார்கள். டிசம்பர் 5 ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரப்போகிறது. வியன்னாவில் உள்ள சர்வதேச அமைப்புகளுக்கான தூதர் மிக்கைல் உலியானோவ், “இந்த முடிவு படுமோசமானது என்பதை பல நாடுகள் பின்னாளில் ஒப்புக் கொள்ளும். இந்த ஆண்டு முதல், ரஷ்யாவின் எண்ணெய் இல்லாமல் ஐரோப்பா இருக்கும்” என்கிறார். இத்தகைய முடிவை ரஷ்யா எதிர்பார்த்தே இருந்தது. அதனால், இந்த முடிவை ஏற்றுக் கொள்ளாத நாடுகளுடன் தனது தொடர்பை வலுப்படுத்திக் கொண்டது. குறிப்பாக, இந்தியாவும், சீனாவும் இந்த விலைக்கட்டுப்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 85 அமெரிக்க டாலர் என்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.